What is right
எது நியாயம்?
கவிஞர் வைரா
எது நியாயம்
சுகந்திகா தேவி முனிவரோடு இல்லறம் இனிதே நடத்திக் கொண்டிருக்கிறாள். வழக்கம்போல் ஒரு நாள் குளத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
அப்போது அண்ணன் தம்பிகளான இரண்டு யட்சர்கள் இவள் அழகில் மயங்கினார்கள். அவளிடம், "பெண்ணே இநதக் கண்பார்வை இல்லாத முனிவருக்கு வாழ்க்கைப்பட்டு என்ன சுகம் கண்டாய்? பேசாமல் எங்களை மணந்துகொள். நாங்கள் முதுமைப் பருவம் அடையாத வரத்தைப் பெற்றவர்கள். என்ன சொல்கிறாய்?".என்று கேட்டார்கள்.
இந்தக் கடுமையான சொற்களைக் கேட்டுப் பொறுத்துக் கொள்ள முடியாத அவள் நேராகச் சென்று கணவனிடம் நடந்ததைக் கூறினான். நடந்ததையெல்லாம் மனைவி சொல்லக் கேட்டு, கணவன் கூறினார்.
"அவர்கள் நாளைக்கும் வருவார்கள். இவ்வாறே கேட்பார்கள். அவர்களை மணந்துகொள்வதாகச் சொல்" என்று கூறினார் கணவன்.
இச்சொற்களைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தாள் அந்தப் பெண்.
"என்ன சொல்கிறீர்கள் ஸ்வாமீ?"
பதிலுக்கு முனிவர் கூறினார்.
"அதிர்ச்சி அடையாதே. சொல்வதைச் செய். மணந்து கொள்வதாகக் கூறியவுடன் அவர்கள் இருவரும் உன்னை நெருங்குவார்கள். அப்போது சொல், உங்கள் இருவரையும் நான் மணக்க இயலாது. உங்கள் இருவரில் அறிவாளி யார் என்று முடிவு செய்யுங்கள் என்று அவர்களிடம் சொல். அறிவாளி யார் என்று முடிவு செய்வதற்குள் இருவருக்கும் சண்டை வந்துவிடும். இருவரும் நானே அறிவாளி, நானே அறிவாளி என்று கூறிக்கொள்வார்கள். முடிவுக்கு வர அவர்களால் முடியாது. இருவரும் சண்டையிட்டுக் கொண்டு என்னிடம் வருவார்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.
விளக்கம் தெரிந்தவுடன், மனைவியும், "அப்படியே செய்கிறேன் ஸ்வாமி" என்று பதில் சூறினாள்.
மறு நாள் அப்படியே நடந்த்து. இருவரும் சண்டையிட்டுக் கொண்டு முனிவரிடம் வந்தார்கள்.
"முனிவர் பெருமானே! எங்கள் இருவரில் யார் அரிவாளி என்று தங்கள் தான் கூற வேண்டும். எங்கள் இருவரில் அறிவாளியைத்தான் மணந்துகொள்வேன் என்று இந்தப் பெண் கூறுகிறாள்" என்று இநத இரண்டு யட்சர்களும் முனிவரிடம் கேட்டுக்கொண்டனர்.
இவர்கள் இவாறு வந்து கேட்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த முனிவர் கூறினார்.
"நானே இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட உரிமை உடையவன். நீங்களோ இவளை விரும்பிய உரிமை உடைவர்கள். என்வே மூவரில் யார் அறிவாளி என்று வேறொருவரிடத்தில் சென்று கேட்பதுதான் சரியாக இருக்கும். வாருங்கள் போகலாம்" என்று கூறினார். முனிவர் கூறியதை இரண்டு யட்சர்களும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் மூவரும் புறப்பட்டனர்.
மூவரும் நான்காவதாக ஒரு மனிதனைத் தேடிப் போய்க்கொண்டே இருநதனர். நீண்ட நேரம் தேடியம் யாரும் கிடைக்கவில்லை. இறுதியாகக் களைப்போடு குளக்கரையை அடைந்து அமர்ந்தனர். அமர்ந்த பின் முனிவர் கூறுகிறார், "நாம் நீன்ட தூரம் நடந்து விட்டோம், தீர்ப்புக் கூறுவதற்கு யாரும் கிடைக்கவில்லை. இனிமேலும் தேடிக்கொண்டு செல்ல எனக்குப் பொறுமை இல்லை. வேறு ஒரு வழியைச் சொல்கிறேன்" என்று கூறி வேறொரு வழியைச் சொன்னார்.
அங்கிருந்த குளத்தைக் காட்டி, "இதோ இருக்கிறதே, இநதக் குளம் தேயவத் தன்மை வாய்ந்தது. இந்தக் குளத்தில் நாம் மூவரும் ஒரே நேரத்தில் மூழ்கி எழுவோம். எழுந்த உடன் இந்தப் பெண் யாரைக் கைபிடிக்கிறாளோ அவரே இவளுக்குக் கனவர் என்று ஏற்றுக் கொள்ளலாம் என்றார். யட்சர்கள் இரண்டு பேரும் இதை ஏற்றுக்கொண்டனர்.
மூவரும் குளத்தில் மூழ்கினார்கள். மூழ்கி எழுந்தார்கள். அந்தப் பெண் இந்த முனிவரையே கைபிடித்தாள். ஏனென்றால் முனிவர் இரண்டு யட்சர்களைக் காட்டிலும் இளமையான அழகான உருவத்தை அடைந்தார். கண்கள் மிகவும் நன்றாகத் தெரிந்தன. உருவமும் அழகாக இருந்த்து. யட்சர்களின் அழகைக் காட்டிலும் மிகச் சிறந்த அழகைப் பெற்றிருந்தார் அந்த முனிவர்.
முனிவரின் அழ்கான வடிவத்தைக் கண்ட யட்சர்கள் வெட்சித் தலைகுளித்து ஓடி ஒளிந்தார்கள்.
நாம் தான் அறிவாளி என்றோ அழகானவர் என்றோ ஆணவப் படக்கூடாது.
அன்புடன்
வை. ராஜேந்திரன்
Your Feedback
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















