மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
செபரா
|
"அழகுக்கு ஆராதனை"(கந்தரலங்காரம் - புதியது)கருத்தாக்கம்: எஸ்.பி.இராமமூர்த்தி (செபரா),“குருகிருபா”மனை எண் 189, 3வது பிரதான சாலை,முதல் குறுக்குத் தெரு, நடேச நகர், சென்னை 92. பதிவு செய்யப்பட்டது. எவ்விதமான பிரதியெடுக்கவும் அனுமதி பெறுவது அறிவுறுத்தப்படுகிறது முருகன் என்றாலே அழகு. அதுவும் குழந்தை வடிவில் அவன் விளங்குவது ஒரு பேரழகு. இப்பாடலை இயற்றும் வரை நான் கந்தரலங்காரம் படித்ததில்லை. கந்த கோட்டம் சென்ற பொழுது, அங்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது. கந்தரலங்காரம் = கந்தனின் அலங்காரத்தைப் பாடும் நூல் என நான் எதிர்பார்த்தபடி அதில் கந்தனின் வடிவழகைப் பாடியாதாக எனக்குத் தோன்றவில்லை. (இது எனது கருத்து. மாறுபடுவதற்கு மற்றவர்களுக்கு உரிமை உண்டு) அப்பொழுது எனக்கு “பாதாதி கேசம் முதல் பக்தனிவன் உன் அழகை, ஓதுவது ஓர் சிறப்பாய்” என்ற வரிகள் நினைவில் தோன்றியது. ஆனால் பாடல் உருவாகவில்லை. அதே நினைப்புடன், நண்பர் குழுவுடன் சிறுவாபுரி செல்ல நேர்ந்தது. என் சிந்தை மகிழ முருகனின் திருவுருவம் கண்ணில் நின்று, என் கருத்தில் நிறைந்தது. பாடல் உருவாகத் தொடங்கியது. நான் வசிக்கும் நடேச நகர் முருகன் வடிவமும் பார்த்தபின், இந்தப் பாடல் முழு வடிவம் பெற்றது. ஈற்றடியாக “எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே! எனைக் காக்க இசைந்தருளவே!!“ எனும் வரிகள் மனதினில் தோன்ற இப்பாடல் தாற்காலிகமாக, நிறைவுற்றது. முதற் பகுதியான் இதில், வேண்டுதலுடன் முடிவடைகிறது. இதன் அடுத்த பகுதி, வேண்டுதல் எவ்வாறு நிறைவேற்றப்படும் எனச் சொல்லும். அதற்கு முருகன் அருள் செய்வான் என நம்புகிறேன். - அன்புடன் செபரா
காப்பு - தும்பிக்கையான் துணைகும்பிட்ட கைகளுக்குக் குவலயத்து நல்வாழ்வும்,நம்பிக்கையும் தரும் அந்த நாயகனின் திருவடியும், தும்பிக்கையும் இங்கு துணையெனவே வருமென்று, எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனை! இனிதிங்கு பாடவும் வந்தேன்!! அழகுக்கு ஆராதனைபாதாதி கேசம் முதல் பக்தனிவன் உன் அழகை,ஓதுவது ஓர் சிறப்பாய் உவந்திங்கென் உளங்கலந்து, வேத முதலானவனே வேலவனே அடி பணிந்தேன்! எழில் கொஞ்சும் நடேச நகர் எழுந்தருளும் இளையனே! எனைக் காக்க இசைந்தருளவே!! 1
மலர்களெல்லாம் ஒன்றாகி, மன்மதனைப் போலிங்கு,
அழகு திருவதனமதில் அருளொளி விளங்கிடவும்,
மதியுந்தன் முகமாக மலருமிரு விழியதுவும்,
முத்தன்ன பல்வரிசை முறுவலித்தால் முல்லையென,
அலைபாயும் கருமுடியும் அழகு திண் தோள் தவழ,
அருளொளி தவழுமெங்கள் அறுமுகன் உன் திரு வதனம்,
பன்னிரு கரத்தழகும், பரந்த திண் தோளழகும்;
விரல்களும் செங்காந்தாள்; வேலவனே உந்தனிரு,
அம்புறாத் தூணியன்ன அழகு முழந்தாளழகும்,
நன்னீரால் நீராட்டி, நறுமணப் புகையூட்டி,
அறுமுகமோ தாமரை! அழகுவிழி தாமரை!
தாமரை மலரன்ன (அவன்) தாள் பணிந்தெழும் அடியார்,
வெண்பட்டு இடையுடுத்தி, விரிமார்பில் பதக்கமுமாய்,
ஒளிரும் செந்ஞாயிறென உலகுய்ய வழிகாட்டும்,
கூன் குருடு முடமென்று குறையிலா வாழ்வதனைக்
பிறப்பொடு, இறப்புமிலா பேரின்ப வாழ்வருளும்,
இல்லமதும் சிறந்திடவும், இனியதீதென்றுரைக்க,
நல்ல தமிழ் நானறியேன்; நாயகன் உன் புகழ் பாட,
எள்ளளவும் ஐயமில்லை; இறைவா நின் நாமந்தன்னை,
தமிழ்க் கடவுள் இவனென்று தரணியெலாம் புகழ்ந்தேத்தும்!
எத்தனை பெரியோர்கள் இறைவனுனைப் பாடினரோ!
இது முதல் முயற்சியென்பேன்; இளையனின் புகழ் பாட,
வண்ண மயிலேறி வரும் வடிவழகன் நாமம் சொல,
|
YOUR FEEDBACK FOR THIS POEM ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |