Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

    என் படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
திருக்குறள் எனும் அமுதம்
ஆகிரா





நீல பகவன் துணை

உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பொருளையான்
உணர்ந்தவிதம் உலகோர்க்கு உரைத்திடுவேன் எளியேனென்
இதயமதில் குடிபுகுந்து உறைநீல பகவனவன்
இருதாள் பணிந்துதானே

கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

அகரம் தொடக்கம் எழுத்துக்கள் யாவுமே அனைத்துக்கும் ஆதாரமாம்
ஆண்டவன் தொடக்கம் ஆகுமே இப்புவி யாவையுமே

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்

எத்தனை படித்தறிந்தும் என்னபயன் இவ்வுலகில்
சித்தமதில் நித்தமுறை வித்தகனின் திருவடியை
பத்தியுடன் பணியாது பாமரராய் என்றுமிந்தப்
பாழுலகில் உழல்பவர்க்கே

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்

உள்ளமெனும் மலரதனில் உறைந்திருக்கும் இறைவனவன்
உத்தமமாம் அடிதொழுது உயிர்த்திருக்கும் அன்பரருள்
வெள்ளமதில் திளைத்தின்ப வாழ்வுதனையே வாழ்வார்
வையகத்தில் நீடூழியே

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

விருப்பென்றும் வெறுப்பென்றும் யாதொன்றும் இல்லாத
திருப்பொருளாய் விளங்குபவன் திருவடியை நினைந்தோர்க்கு
வினைப்பயனால் விளைகின்ற இன்னலெதும் அண்டாது
விளங்கிடுமே புவிவாழ்விதே

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

இறைவனவன் மெய்ப்புகழை என்றென்றும் விரும்பியிங்கு
எக்காலும் அன்புசெய்யும் மாந்தர்தமை யேயென்றும்
அறியாமையால் விளையும் நல்வினைதீ வினையிரண்டும்
அடையாவே ஒருபோதுமே

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

மெய்வாய் கண்மூக்கு செவியென்னும் ஐம்பொறிகள்
பொய்யாய் விளைவிக்கும் ஆசையவை தானொழித்த
மெய்யாய் விளங்குமந்த மெய்ப்பொருள் ஒழுக்கமதை
செய்வார் செழித்துவாழ்வார்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது

ஒப்பாரும் மிக்காரும் என்றுமிலா இறைவனவன்
உன்னதத் திருவடியில் உறைவோர்க் கன்றியார்க்கும்
உள்ளமதில் வெள்ளமென ஊற்றெடுக்கும் கவலையது
ஒருநாளும் நீங்காது காண்

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்த லரிது

அனைவர்க்கும் அறம்செய்யும் ஆழியெனும் அந்தணனாம்
ஆண்டவனின் திருவடியை அடைந்தவர்க் கேயன்றி
அரிதாமே இவ்வுலகில் நீந்திக் கடத்தலென்றும்
அறம்சேரா எக்கடலுமே

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

உலகினிலே உள்ளபொருள் உணர்பொறிகள் தவிர்த்தெட்டு
உன்னதமாங் குணம்கொண்ட ஒளிவடிவாம் இறைவனவன்
தலையாய தாள்பணிந்து உய்வடையாதோர்க் கென்றும்
தலையிருந்தும் இல்லாததே

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி செராதார்

இறைவனடி யெனும்தோணி என்றென்றும் பற்றியவர்
பிறவியெனும் பெருங்கடலில் நீந்திக் கரைசேர்வார்
அவனடியை எண்ணாதோர் அஃதென்றும் நீந்துகிலார்
அடையார் கரைதன்னையே

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button