பாரதி வாழுகிறார்
செபரா
எந்நாளும் பாரதி நம் இதயத்தே வாழுகிறார்
மண்ணிலவர் உரைத்தபடி மாதவளும் ஆளுகின்றாள்!!
அண்ணலவர் தெய்வகவி ஆனதனால் நிகழ்ந்ததன்றோ என
எண்ணுகிற இதயமெலாம் பாரதி எந்நாளும் வாழுகின்றார்!!
தமிழென்றும் உயர்ந்ததென்று இத்தரணியிலே அறிந்திடவும்,
அமிழ்தம் அது இனியதென ஆக்குவதே நம் கடமை!!
நற்றமிழை வளர்த்திந்த நானிலம் அறியச் செய்ய,
கற்றவர்கள் முன்வருவார் பாரதி அக்கருத்தினிலே வாழுகின்றார்!!
தனியொருவருக்கு உணவிலையெனில் தரணிதனை அழித்திடுவோம்!!
இனியேனும் மாற்றுவோம் இழிநிலைமை ஈதென்றார்;
முனிந்தெழுந்தார் முன்வரவே முண்டாசுக்கவி மகிழ,
இனிதின் நிலமையென்பார் மனதில் பாரதி எந்நாளும் வாழுகின்றார்!!
பெண்ணவள் துகிலுரியப் பேதைகளாய்ப் பார்த்ததையும்,
கண்ணனெனும் பெருந்தெய்வம் கைகொடுத்துக் காத்ததையும்,
பண்ணதனில் எளிதாகப் பாமரருக்கும் உணர்த்தியதால்;
மண்ணுலகோர் மனதினிலே பாரதி மகிழ்ந்தென்றும் வாழுகின்றார்!!
கண்ணனைத் தெய்வமாய்க், காலமெலாம் வழித்துணையாய்,
எண்னமெலாம் இனிக்க, ஏற்புடைக் காதலியாய்,
மண்ணில் நற்பணியாற்ற, மனத்தால் நற்சேவகனாய்,
கண்ணிலே நிறுத்தியவர், பாரதி தன் கவிதையிலே வாழுகின்றார்!!
கண்ணனைப் பலவடிவாய்க் கண்டதொரு புலவனவன்,
கண்ணற்ற காலன்தான் கடமைக்குப் பலியாக்க,
மண்ணிலவர் பணிமுடிக்க மற்றொருவர் முன்வந்தார்;
அண்ணலவர் தாசனென்பார் பாரதி அவரெழுத்தினிலே வாழுகின்றார்!!
சாதிகள் இல்லையெனச் சாற்றியவர் சளைக்காது
மேதினியில் அக்கொடுமை (இன்னும்) மேவுகின்ற காரணத்தும்,
வேதனை இது ஒழிய விண்ணதிர முழங்கிடுவாரவர்;
சாதனைகள் படைத்திட்டார் செயலில் சரித்திரமாய் வாழுகின்றார்!!
- இன்னும் வரும் இது இனிய நற்தொடராய்..
அன்புடன்
செபரா
மழலைகள் ஆசிரியர் குழு
என் படைப்புகள்
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||













