தாயென்று கும்பிடடி பாப்பா
- நாதன் நாமம்
செபரா
இதோ, ஒரு முருகன் பாடல். மனமொன்றி, மூலப்பாடல் வகையில் ஏற்றி, இறக்கி ஆரோக, அவரோகணத்துடன் பாட சிறப்பாக இருக்கும். எந்த வரி இரு முறை பாட வேண்டுமென்பது, அவரவர் கற்பனா சக்தியினைப் பொறுத்தது.
மெட்டு: ஆடுவோமேப் பள்ளுப் பாடுவோமே
நாதன் நாமம், இங்கு நாளும் பாட, மனம்
நாடும் வரமனைத்தும் நயந்து இங்கெமக்கருளும், குரு
(நாதன்)
வேதனைகள் தீர்த்திடுவான் (வடி) வேலவனே எனத் துதிப்பார்
வேதனைகள் தீர்த்திடுவான் (வடி) வேலவனே எனத் துதிப்பார்
ஆதனலினால் அவர்க்கும், அருள் புரிந்தாட் கொள்ளுவான்!!
சாதனைகள் செய்திடவும் உடனிருப்பான்; எங்கள்
ஷண்முகனை மனம் நாடிச் சரணம் என்றடி பணிந்தே
(நாதன்)
பாதாதி கேச முதல் பக்தனிவன் உன்னழகை,
ஓதுவது ஓர் சிறப்பாய் உவந்திங்கென் உளங்கலந்து,
வேதமுதலானவனே வேலவனே என நினைத்துக்
காதலாகி மனமும் இங்கு கசிந்து கண்ணீர் மல்க!!
நாதன் நாமம்! குரு நாதன் நாமம்! சற்குரு நாதன் நாமம்!!
அன்புடன்
செபரா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














