தாயென்று கும்பிடடி பாப்பா
- பாரத தேவியின் மணிக்கொடி
செபரா
நமது தேசியக் கொடி
சந்தக் கவி கேட்டபடி வந்தவருக்கு வழங்கிடவேஇந்தக் கவி செய் முயற்சி இனிதாக, ஒரு கவிதை!
எந்த ஒரு இந்தியனும், இயம்பிட வேண்டும் ; நமது
தந்தையர் பிடித்த கொடி, புகழ் தான் சொலவும் வேண்டும்!"
தாயின் மணிக் கொடி பாரீர்!!
பாரத தேவியின் மணிக் கொடி பாரீர்!!
பக்தி செய்தே அதை வணங்கிட வாரீர்!!
நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்!!
நெஞ்சம் விழைந் து புகழ் நித்தமும் சொல்வீர்!!
(பாரத தேவியின்
)
சீர்மிகும் சிகப்பு செப்பிடும் உண்மை,
சிறப்பது தரும் (நல்லோர்) பலர் செய்திட்டத் தியாகம்!!
பசுமை நிறம் உணர்த்தும் நல் பல்வகைச் செழுமை!!
பாரெல்லாம் போற்றும் இப்பாரதப் பெருமை!!
(பாரத தேவியின்
)
வெள்ளை உணர்த்தும் நம் உள்ளத்தின் சிறப்பு!
விழைந்து எவர்க்கும் தீ வினையதும் செய்யோமென:
ஒயுதல் இன்றியிங்கு உயர்வது நாடும்,
உள்ளது தருமமென உணர்த்திடும் சக்கரம்!!
(பாரத தேவியின்
)
அறிவோம்! தெளிவோம்!! அகமிக மகிழ்ந்து
அன்னியராயினும் அவரும் நண்பரென,
உணர்வோம்!! மகிழ்ந்து உணர்வித்திடுவோம்!!
உள நாளும் நாடு உயர்ந்திட உழைப்போம்!!
கருத்து மற்றும் இசையமைப்பு - செபரா
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














