மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
என்.வி. சுப்பராமன்
|
அரச மரத்துக் கூட்டிலே அணில் குஞ்சு பொரிக்குது ஆலமரத்துப் பொந்திலே காக்கைக் குஞ்சு இருக்குது மா மரத்துக் கிளையிலே குருவிக் கூடு கட்டுது வேப்ப மரத்துக் கிளையிலே குரங்குக் குட்டி தூங்குது அடர்த்தியான காட்டிலே சிங்கம் புலி வாழுது பச்சை வயல் காட்டிலே புள்ளி மானும் துள்ளுது தெரு முனைக் குளத்திலே ஆடு மாடு குளிக்குது சிறுவர் பெரியர் அனைவரும் அழுக்குப் போகக் குளித்தனர் நிலத்தின் மடியில் மீதிலே அனைவருமே வாழ்கிறோம் இயற்கையோடு இயைந்த வாழ்வு எல்லோருக்கும் இனியதே ! -- என்.வி. சுப்பராமன், சென்னை. |
GIVE YOUR FEEDBACK FOR THE ABOVE POEM
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |