சுதந்திரத் திருநாள் இந்நாளே!
துன்பம் தீர்த்த நந்நாளே!
இதந்தரும் இன்ப இசையோடே
என்றும் பாடி மகிழ்வோமே
விடுதலை இல்லாக் காலத்திலே
விலங்கைப் போன்றே வாழ்ந்தோமே!
படுகொலை பஞ்சம் பட்டினியாய்ப்
பாரோர் இகழத் தாழ்ந்தோமே!
அடிமை விலங்கை அறுத்தெரிய
அண்ணல் காந்தி விரைந்தாரே
கடுமை மிகுந்த வெள்ளையரில்
கருணை பிறக்க வில்லையடா
விடுதலை என்பது பிறப்புரிமை
விளங்கும் பறவை இனம்போல
படபடவென்றே பறந்திடவே
பாரத மக்கள் கூடினரே
இறுக்கங்கொண்ட வெள்ளையர்கள்
இரக்கம் கொள்ளை வில்லையடா!
நொறுக்க வேண்டும் தலையெனவே
நோக வைத்தார் நிலைகுலைய
கத்தியில்லா ரத்தமில்லாக்
கருணை அகிம்சை வழியினிலே
சித்தர் காந்தி நம்தெய்வம்
செய்த வேள்வி விடுதலையே!
பொன்விழா ஆண்டு பொலிவுபெறப்
பெற்றதைப் பேணிக் காத்திடுவோம்
மன்பதை போற்ற வாழ்ந்திடுவோம்
மக்கள் யாவரும் ஒன்றாவோம்!
நீல பகதீசுவரன்