மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
| மழலை மொட்டு ஆசூரி இராஜகோபாலன் |
|
உள்ளே
இணையப் பாட்டி ஆன்மீகம் தெய்வீகம் லௌகீகம் கலைகள் கல்வி பொது அறிவு நிர்வாகம் Net Granny Philosophy Religion Entertainment Arts Education Knowledge Management வெளியேதமிழிலக்கியம்தமிழிதழ்கள் தமிழ்மணம் நிலாச்சாரல் சுரதா.காம் தேன்கூடு தினமலர் தினகரன் Answers The Hindu Dictionary Geography Downloads Knowledge Special Links Encyclopedia Mazalais Blog E-mail Services |
காஞ்சி கம்பன் கழகம் மற்றும் சிந்தனா அமைப்புகளில் உறுப்பினரான ஆசூரி ராஜகோபாலன் அவர்கள் ஆசிரியப் பணியில் சிறு குழந்தைகளுக்குக் கல்வி புகட்டி, அதிலுள்ள சுகத்தை முழுமையாக உணர்ந்தவர். யாம் பெற்ற இன்பம் இவ்வுலகமும் பெறவேண்டி அவர் குழந்தைகளுக்காக எழுதிய மழலை மொழிப் பாடல்களின் தொகுப்பு புத்தக வடிவில் "மழலை மொட்டு" எனும் பெயரில் 6-10-2007 அன்று சிந்தனா அமைப்பின் தலைவர் டாக்டர் C.K. இராமன், எம்.ஏ.,எம்.எல். அவர்களால் வெளியிடப்பட்டது. தமிழ், சமஸ்க்ருத, ஆங்கில ஆன்மீக சொற்பொழிவாளர் இராமாயணம் சீனிவாசன் ஐயா அவர்கள் விழாவுக்குத் தலைமை ஏற்றார். இவ்விழாவில் புலவர் நீல. பகவதீஸ்வரன், அவரது மருமகன் இளைய பகவதீஸ்வரன், புலவர் முத்து. இராமமூர்த்தி, மழலைகள்.காம் ஆசிரியர் ஆகிரா மற்றும் பலர் பங்கேற்றுப் பேசினர். இந்நூலைப் படித்த சான்றோர்கள் அவர் மேல் எழுதிய கவிதைகளை இங்குக் காண்க. இராமாயணம் ஐயா அவர்களின் வாழ்த்து
பாலர்க்குப் பாடுவதுதான் பாட்டாகும் தேடுவது எல்லாம் கிடைப்பதில்லை தேடாமல் இருப்பதும் வீணேயாகும் நாடுவது யாவும் நல்லதாயின் நானிலம் சிறப்பாய் உயர்வெய்தும் பாடுவது தொழிலில்லா ஆசூரி பாடியது பயனுள்ள பாட்டாகும்
தெள்ளுத் தமிழ்க் கலைவாணர்
சின்னவர் முன்னேற வழிகாட்டி இராமாயணம் சீனிவாசன்
பாராட்டு மடல் - புலவர் நீல பகவன்
அருந்தமிழ் மூதாட்டி ஔவைபாடல்
அகம் தனிலே நிரம்பிடவே அமுதமாகப் பொருந்துகிற முறைதனிலே குழந்தைப்பாடல் புதியவழி காட்டிநமைப் பொலியவைத்தார்! அருவியெனக் கவிபொழிய அடுத்துவந்தார் அமரகவி பாரதியார்! அவரைப்போல பெரும்புகழால் கவிமணியும் பாடல்சொன்னார் பேரழகு வள்ளியப்பா பிழிந்தெடுத்தார்!
பிள்ளைமொழி கிள்ளைமொழி வள்ளலாகிப்
ஆரம்பத்தில் பள்ளிதனில் ஆசானானார்!
மழலைமொட்டு பிள்ளைகளின் மனதைத்தொட்டு வாழ்க வளமுடன்
எழுவது வயதினை எய்திய இளைஞர்
ஒழுக்கமும் கல்வியும் உயர்வுற உடையவர் அழகிய தமிழ்போல் அனுதினம் வாழ்ந்திட அழகன் ஆரா அமுதினை இறைஞ்சுமே!
வேழ முகத்து விநாயகரை
பார்த்த பொருளிலெல்லாம்
அஞ்சிலே மனதிலே பதிபவை
குழந்தை இலக்கிய நூல்கள்
|
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |