மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
தாத்தா சீனு - ஆகிரா
|
|
|
சீனு மாமா:
தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்
ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
தந்தை அருள்வலி யாலும் - முன்பு
இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
சொல்லவும் கூடுவ தில்லை - அவை
என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
தந்தை அருள்வலி யாலும் - இன்று ஆகிரா: அன்புள்ள சீனு மாமா, தங்கள் மனதில் ஆழப் பதிந்த இக்கவிதை பற்றிய தங்கள் கருத்துக்களை எழுதுங்கள். இக்கவிதையின் வாயிலாக மஹாகவி தமிழர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் என்ன? என்பதை அனைவரும் அறிய வேண்டும். இப்பொருளைக் குறித்து தங்களது கருத்துக்களை விரிவாக எடுத்துரைக்க வேண்டுகிறேன்.
புத்தம் புதிய கலைகள் - பஞ்ச என்ற கூற்று பாரதம் அடிமைப்பட்டிருந்த காலத்தில் எடுபட்டிருக்கலாம் ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. அனைத்து விஞ்ஞானப் பாடங்களும் பள்ளிகளில் தமிழிலேயே பயிற்றுவிக்கப்படுகின்றன. கணினியின் அனைத்து செயலிகளிலும் தமிழ் இடம்பெறும் காலத்தில் நாம் வாழ்கிறோம். நூல்களும், பத்திரிகைகளும் காகிதத்தில் அச்சிட்டு வீதி விதியாக அலைந்து விற்கும் காலம் மலையேறிவிட்டது. முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகளும் நூல்களும் இணையவழியே பவனிவரத் தொடங்கியுள்ளன. இணையதளம் அமைப்பது எப்படி என்பது பற்றி ஆங்கிலத்தில் பல இணையதளங்கள் விளக்கமான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கின்றன ஆனால் தமிழிலேயே பயிற்றுவிக்கும் தளம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்பணியை மழலைகள்.காம் தளத்தில் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறேன். இது தவிர என் அனுபவத்தில் கண்ட இயந்திரத் துறை சார்ந்த தொழில் நுட்பங்கள் பலவற்றைத் தமிழில் தொகுத்து வழங்கவும் முயற்சி எடுக்கிறேன்,
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த என்ற கூற்றினில் தமிழைப் பற்றிக் குறைவாகக் கூறியவன் ஒரு பேதை என்பதைச் சரியாகப் படிக்காமல் தமிழர்களிலேயே பலர் முதல் இரு வரிகளை மட்டும் படித்துவிட்டுத் தாறுமாறாகப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இனிமேல் அவ்வாறு யாரும் தமிழை இழிவாகக் கருத இடமில்லாமல் செய்யத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தாத்தா சீனு: அன்புள்ள ஆகிரா, பாரதியாரின் கன்வுகளில் முக்கியமான ஒன்றான தமிழ்க் குழந்தைகளை இப்பாரிலுள்ள மற்றக் குழந்தை மேதைகளுக்கீடான, முடிந்தால் இன்னமும் மேலான திறமுடைந்தவர்களாக வருவதற்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுக்க்கும் பணியில் தாங்கள் தான் நாள் பொழுது பார்க்கமால் மனம் உடல் செயல் எல்லாம் ஒருங்கே இணைந்து ஈடு பட்டு வருகிறீர்களே. இந்த அறைகுறைத் தமிழெழுத்தாளன் தங்களுக்காக எழுதுவதற்கு என்ன இருக்கிறது? நான் ஏதும் எழுதினால் அது மீனுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பது போலாகும்.
"மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த மேற்படி எழுதிய பாரதியார் தனது தமிழையும் தனது தமிழ்நாட்டைப் பற்றியும் எவ்வளவு பெருமையுடன் தன்னம்பிக்கையுடனும், (மேலான கனவுகளுடனும்) தன் பூதவுடலுடனுடன் இவ்வையகத்தில் வாழ்ந்தார் என்பதற்கு அவரது புகழ்பெற்ற பாடலை தாங்கள் அனுமதிப்பீர்கள் எனும் நம்பிக்கையுடன் கீழே கொடுக்கிறேன். ஏதாவது ஒரு கூட்டம் (meeting) என்றாலும் கணபதி தோத்திரம் குருவந்தனம் சரஸ்வதி தோத்திரம் (அவைகளில் ஒன்றாவது) பாடப்பட்டால், எப்படி எல்லோரும் பொருமையுடன் கேட்கின்றார்களோ அப்படியோ இந்தப் பாடலையும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே -- இன்பத்
(செந்தமிழ்) 1
வேதம் நிறைந்த தமிழ்நாடு -- உயர்
(செந்தமிழ்) 2
காவிரித் தென்பெண்ணை பாலாறு -- தமிழ்
(செந்தமிழ்) 3
முத்தமிழ் மாமுனி நீள்வரையே -- நின்று
(செந்தமிழ்) 4
நீலத் திரைக்கட லோரத்திலே -- நின்று
(செந்தமிழ்) 5
கல்வி சிறந்த தமிழ்நாடு -- புகழ்க்
(செந்தமிழ்) 6
வள்ளுவன் தன்னை உலகினுக்கே -- தந்து
(செந்தமிழ்) 7
சிங்களம் புட்பகம் சாவக -- மாகிய
(செந்தமிழ்) 8
விண்ணை யிடிக்கும் தலையிமயம் -- எனும்
(செந்தமிழ்) 9
சீன மிசிரம் யவனரகம் -- இன்னும்
(செந்தமிழ்) 10
அந்த தெய்வீக கவிஞரின் உயரிய எண்ண்ங்களையும் 'தான்' என்ற அகந்தை சற்றுமேயில்லாத அடக்கத்தையும் வலியுறுத்துவதற்காக கீழ்க் கண்ட வரிகளை சமர்ப்பிற்கின்றேன் பாரதியார் அவர்களது "பாஞ்சாலி சபத"த்தின் முதற் பதிப்பில் பாரதியார் அவர்களே எழுதியிருந்த 'சமர்ப்பணமும்' 'முகவுரை'யும் கீழ் வருமாறு: சமர்ப்பணம் தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப்போகிற வரகவிகளுக்கும் அவர்களுகுத் தக்கவாறு கைங்கரியங்கள் செய்யப்போகிற பிரபுக்களுக்கும் இந் நூலைப் பாதகாணிக்கையாகச் செலுத்துகிறேன். ஆசிரியன் முகவுரை எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவிய மொன்று தற்காலத்திலே செய்துதருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகின்றான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ்மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல்வேண்டும். காரியம் மிகப் பெரிது; எனது திறமை சிறிது. 'ஆசையால்' இதனை எழுதி வெளியிடுகின்றேன், பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழி காட்டியாக. இந் நூலிடையே திருதராஷ்டிரனை உயர்ந்த குணங்களுடையவனாகவும், சூதில் விருப்பமில்லாத வனாகவும், துரியோதனிடம் வெறுப்புள்ளவனாகவும் காட்டியிருக்கின்றேன். அவனும் மகனைப் போலவே துர்க் குணங்களுடையவன் என்று கருதுவோரு முளர்..எனது சித்திரம் வியாசர் பாரதக் கருத்தைத் தழுவியது. பெரும்பான்மையாக, இந்நூலை வியாசபாரதத்தின் மொழிப்பெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது, 'கற்பனை' திருஷ்டாந்தங்களில் எனது 'சொந்தச் சரக்கு' அதிகமில்லை; தமிழ்நடைக்குமாத்திரமே நான் பொறுப்பாளி. தமிழ்ஜாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டுமென்று கங்கணங் கட்டிநிற்கும் பராசக்தியே என்னை இத் தொழிலிலே தூண்டினாளாதலின், இதன் நடை நம்மவர்க்குப் பிரியந்தருவதாகும் என்றே நம்புகிறேன். ஓம் வந்தே மாதரம். -- சுப்பிரமணிய பாரதி Venkatram Shrinivas V.Shrinivas (Seenu) |
GIVE YOUR FEEDBACK FOR THE ABOVE ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |