மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
தாத்தா சீனு
|
|
சர்வஜித் வருஷத்திய பலன்சர்வஜித் தன்னிற் றவத்தில்பலவும்ஒருபதினெட்டு வித்துமோங்கும் - பெருமையுடன் மிக்கவிளைவுண்டா மென்மேலு மாரியுண்டாம் தக்கசுகம் பெருகுந் தான் மேற்கண்ட வரிகளின் பொருள் என்னறிவுக்கெட்டியபடி இவ்வாறு இருக்கலாம்: சர்வஜித் வருடத்தில் பல தவங்களும் பதினெட்டு கலைகளும் பெருமையுடன் திகழும். மிக நல்ல விளைச்சலுண்டாகும். மேலும் மேலும் மழை பெய்யும். எங்கும் சுகம் பெருகும். ஆங்கில வருடங்களுக்குப் பெயர் கிடையாது ஆனால், மொத்தம் 60 வருடங்களின் காலக்குறிப்புடன் கொண்ட தமிழ் வருடம் ஒவ்வொன்றிற்கும் தனிப் பெயருண்டு. அந்த 60 வருடங்களின் பெய்ர்கள் கீழே கொடுக்கப் பட்டிருக்கின்றன;
இப்பொழுது கண்டு கொண்டிருப்பீர்கள். பிறக்கப் போகும் சர்வஜித் மேற்கண்ட காலக் கணக்கின்படி 21ம் வருடமாகும்.
நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது சர்வஜித் வருடத்தில் தான் (ஆகஸ்ட் 15, 1947)
இந்த 60 வருட கால நிர்ணயம் ஜூபிடர் (ப்ரஹஸ்பதி, வியாழன், குரு) கிரகத்தை மேற்கொண்டிருக்கிறது. ஜூபிடர் நம் பூமியைப் போல் சூரியனை ஒரு முழு சுற்று வருவதற்கு 12 வருடங்கள் ஆகின்றன. அது போல் 5 சுற்று முடித்து வருவது வாணூலினின் அடிப்படையில் ஒரு கணக்கு இருப்பது போல் தெரிகிறது. நமது பஞ்சாங்கம், ஜோதிடம் இவ்விரண்டும் எவ்வாறு வாணூலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றி எனக்குத்தெரிந்த பலவிவரங்களை உங்களெல்லோரிடமும் பகிர்ன்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல். வருக வருக வருகவேவருடமுழுதும் யாவருக்கும் நன்மையுடன் வெற்றியையே கொடுக்கும் சர்வஜித் வருடமே வருக வருக ! நமக்கு சுதந்திரம் கிடைத்தது சர்வஜித் என்றெழுதியிருந்தேனல்லவா?மேலும், இந்த மகத்தான சர்வஜித் வருடத்தில் தான் (கி. பி. 1767ம்) மகான் தவத்திரு தியாகராஜ சுவாமிள் அவதரித்தார். இதே சர்வஜித் ஆண்டில் தான் ( கி.பி. 1875) தயானந்த சுவாமிகள் 'ஆரிய சமாஜத்தை' நிறுவினார். புத்தபிரான் நிர்வாணம் எய்தியதும் சர்வஜித் ஆண்டில் தான் என்று சொல்லப் படுகிறது . பஞ்சாங்கம்கால நிர்ணயம், நமது வேதங்கள், வான சாத்திரம் இவைகளுக்குள்ள சம்பந்தங்களைப் பற்றி பல ஆராய்ச்சிகளர்கள் கணக்கிடலங்காப் பக்கங்கள் எழுதியுள்ளனர். அதில் கணக்கியலைச் சார்ந்த கோணவியல் (trigonometry) குறிக்கணக்கியல் (algebra), இவைகளையும் உபயோகித்திருக்கிறார்கள். இவைகளில் என்னைப் போன்ற சாதாரன மனிதர்கள் புரிந்து கொண்ட, அதுவும் முக்கியமாக, நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்குத் தேவைப்பட்ட தகவல்களை மட்டும் தேர்ந்தெடுத்து, பிறகு அவைகளை முடிந்தவரை மிகவும் சுருக்கித் தங்களுக்கு வழங்குகிறேன். தயவு செய்து பொறுத்திருக்கவும் (இந்த வேண்டுகோள் முக்கியமாக எனது மிக மதிப்பிற்குறிய திரு ஆகிரா அவர்களுக்காக)அதில் எதிர்பாராத சில தவறுகள் தென்பட்டால், இதைப் படிக்கும் அறிஞர்கள் என்னை மன்னித்துவிட்டு, அப்படியே திருத்தங்கள் செய்துவிட்டு அடியேனுக்கும் தெரியப் படுத்தவும்.) இப்பொழுது அதற்காக ஒரு சிறு தகவலை மட்டும் விவரித்துவிடுகிறேன். குரு கிரகம்சூரியனை ஒரு சுற்று வருவதற்கு 12 வருடங்கள் ஆகின்றன. அவ்வாறு ஒரு சுற்று வருவதற்கு சனி கிரகத்திற்கு 15 வருடங்களாகின்றன. இவ்விரண்டு கிரகங்களும் ஒன்றாக, முதலில் வானவெளியில் சூரியுனுக்கு முன்பான ஒரே நேர்கோட்டில், முதலில் துடங்கிய அதே இடத்திற்கு வந்தடைவதற்கு 60 வருடங்கள் ஆகின்றன. இந்த 60 வருட காலத்தை 'பிருகஸ்பதி மன்வந்திரம்' என அழைக்கிறார்கள்.
|
|||||||||||||
| Submit your articles | One Free Software Every Day | ****** | Happy Birthday |