Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

    படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
புகழ்மிக்க புலவர்கள்
கீதா சாம்பசிவம்





The story of Tamil poet auvaiyaar, K.B. Sundarambal as auvaiyaar in S.S. Vasan's Tamil film auvaiyaar
நமக்கெல்லாம் "ஆத்திச்சூடி" கொடுத்த ஒளவைப் பாட்டியைப் பத்தி எல்லாரும் அறிவோம். இந்த ஒளவைப் பாட்டிங்கறவங்க நிறையப் பேர் இருந்ததாய் எல்லாருமே சொல்லறாங்க. எத்தனை பாட்டிங்க இருந்தாலும் அத்தனை பேருமே நமக்கு நல்லது தான் சொல்லிட்டுப் போயிருக்காங்க. அப்படி ஒரு ஒளவைப் பாட்டி காலத்தில் இவங்க இருந்தது சங்க காலம்னு நினைக்கிறேன். ஏன் என்றால் கடை எழு வள்ளல்கள் இருந்தது சங்க காலம்னு சொல்லுவாங்க. நான் இப்போ சொல்லப் போற ஒளவைப் பாட்டி கடை எழு வள்ளல்கள் கிட்டே பழக்கம் உள்ளவங்க. அவங்களோட அரசவையிலே பாடி இருக்காங்க. அப்படின்னா இவங்களும் சங்க காலத்து ஒளவைப் பாட்டியாத் தான் இருக்கணும். இவங்க சின்ன வயசிலே ரொம்பவே அழகா இருந்ததாயும், அவங்க அப்பா, அம்மாவுக்கு ஒரு நதிக்கரையில் கிடைத்த குழந்தைன்னும் சொல்லுவாங்க.

இவங்களுக்கு உரிய வயசு வந்ததும் அப்பாவும், அம்மாவும் இவங்களுக்குக் கல்யாணம் பண்ண நினைச்சாங்க. ஆனால் இவங்களுக்குக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை.

அதனாலே இவங்க என்ன செஞ்சாங்க தெரியுமா? உடனே விநாயகரைப் போய்த் துதிச்சாங்க. விநாயகரைப் பார்த்து, "அப்பனே, விநாயகா, எனக்குக் கல்யாணமே வேண்டாம், இவங்க என்னைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லி வற்புறுத்தறாங்களே! நீ என்னை இதில் இருந்து காப்பாற்ற மாட்டியா?" அப்படீன்னு கேட்டு

"பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா"

என்று பாடவே, உடனே பிள்ளையாரும் உதவிக்கு வந்தார். இந்த மாதிரித் தமிழ்ப் பாடல்களைப் பாடிக் கொண்டும், ஊர் ஊராகத் தமிழைப் பரப்பிக் கொண்டும் போவதுன்னா, அதுக்கு இவங்க இந்த மாதிரிச் சின்னப் பொண்ணா இருந்தா ரொம்பக் கஷ்டம்னு விநாயகர் யோசிச்சு அவங்களை ஒரு வயசான பாட்டியா மாத்திட்டார். ஒளவையும் ரொம்பவே சந்தோஷப்பட்டு உடனேயே, மேலே சொன்ன பாட்டை முதலில் வைத்து "விநாயகர் அகவல்" பாடினார் என்று சொல்லுவாங்க.

விநாயகரின் உருவமே "ஓம்" என்று சொல்லப் படும் ஓங்கார சொரூபம். பிரணவ சொரூபம்னும் சொல்லுவாங்க. பிரணவ மந்திரமே "ஓம்" தானே! அதனால் இந்த மாதிரி. சொல்லறாங்க. நம்ம எல்லாருக்கும் ரொம்பவே பிடிச்ச கடவுள் யாருன்னா எல்லாருமே அநேகமாய்ப் பிள்ளையாரைத் தான் சொல்லுவோம். இப்படி இருந்தாலும் ஒருத்தருக்குப் பிடிச்ச சாமி இன்னொருத்தருக்குப் பிடிக்காது. இருந்தாலும் நம்ம சாமிங்க எல்லாம் கோபிக்காது. நீங்க எந்த சாமியைக் கும்பிட்டாலும் அவங்க வந்து உங்களுக்கு நல்லது செஞ்சு கொடுப்பாங்க. அதுக்கு மனசில் நல்ல நம்பிக்கை வேணும். முதலில் ஏன் இத்தனை சாமின்னு கேட்கிறவங்களுக்குப் பதில்...... அடுத்த இதழில், வரட்டுமா? அப்புறம் பார்க்கலாம்.

"ஸ்ரீராம்ஜி கி ஜெய்" சொல்லுங்க எல்லாரும்.

தொடரும்....

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button