கதைகள் என்றால் நம் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக, குழந்தைகளுக்குக் கதைகள் கேட்பதில் அலாதி ஆர்வம் உண்டு. தினமும் இரவில் படுக்கைக்குச் சென்ற பின் கதை கேட்டால் தான் பெரும்பான்மையான குழந்தைகள் உறங்குவார்கள். நல்ல கதைகளைக் கேட்டு வளரும் குழந்தைகள் பலர் பிற்காலத்தில் வளர்ந்து மிகப்பெரிய சாதனையாளர்களாக மலர்வதுண்டு. இதற்கு உதாரணம் மராட்டிய மன்னர் வீர சிவாஜி. அவரது தாயார் கூறிய வீரக் கதைகளைக் கேட்டு ஒரு மாவீரராக உருவானவர் வீர சிவாஜி. நமது நாட்டில் கதைகளுக்குப் பஞ்சமில்லை.
குழந்தைகளும் மற்ற அனைவரும் படித்து மகிழ உயரிய கருத்துள்ள பல கதைகளை வழங்குவதே இக்கதைப் பகுதியின் முக்கிய நோக்கம். புராணக் கதைகள், சரித்திரத்தைச் சார்ந்த கதைகள், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்ட கதைகள், மற்றும் கற்பனைக் கதைகள் ஆகிய இவற்றில் எதுவாயினும் அவற்றிலுள்ள ஆக்கபூர்வமான கருத்துக்களை மட்டுமே வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். அதுவே நமது குறிக்கோள்.
சுகந்தியின் கதைகள்