ஒரு தேசத்தின் எதிர்காலம் உருவாகுமிடம் - பள்ளிக்கூடம்
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். தெய்வத்திற்கு தங்கத்தில் கோவில் அமைத்த நாடு நம் பாரத நாடு. ஆனால், ஏழை குழந்தைகளுக்கு படிக்க முழுமையான வசதிகள் இன்னும் இல்லாத நாடும் நம் பாரத நாடே!
குழந்தைகள் பட்டாம்பூச்சிகள் போன்றவர்கள். கவலையின்றி வானில் அவர்கள் பறக்க வேண்டும். நம் நாட்டில் சிறகுகள் முளைக்கும் முன்பே
உதிர்ந்து போன பட்டாம்பூச்சிகள் ஏராளம். இந்நிலை மாறிடல் வேண்டும். நாளைய நம்பிக்கை விருட்சங்கள் குழந்தைகள். படிக்க வசதி இல்லாமல்
எத்தனையோ மொட்டுக்கள் இன்றும் செங்கல் சுமக்கவும் சாலைகளில் செய்தித்தாள் விற்கவும், உணவு விடுதிகளில் எடுபிடிகளாகவும்
வாழ்ந்துகொண்டிருப்பதை வேதனையுடன் பார்க்கிறோம்.
இதற்கு இளைஞர்களாகிய (குறிப்பாக அதிகமாய் சம்பாதிக்கும் நம் போன்ற கணிப்பொறி மென்பொருளாளர்கள்) என்ன செய்தோம் என்கிற கேள்வி
என்னுள் பலநாட்களாக எழுந்தது. அதற்கு விடைகொடுத்தது
www.helptolive.org என்கிற இணையதளம்.
முழுக்க முழுக்க ஒரு தனிமனிதரின் (இவர் ஒரு கணிப்பொறி மென்பொருளாளர்) முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு இன்று 400க்கும் அதிகமான தன்னார்வ உறுப்பினர்களை கொண்டு இயங்குகிறது.
கூரையின்றி வாழ வாழ்க்கை அனுமதிக்கிறது. கூரையின்றி படிக்க குழந்தைகளை அனுமதிக்கலாமா? சரியான பள்ளிக்கட்டிடங்கள் இல்லாமல்
தவித்து நிற்கின்றன 260 பிஞ்சுக்குழந்தைகள். நாளைய நம்பிக்கைகளுக்கு வாழ்க்கையின் ஏணிப்படியில் ஏற கைகொடுப்பது நம்போன்ற
இளைஞர்களின் கடமை அல்லவா?
உதவ விருப்பமிருக்கிறது.... ஆனால் எப்படி உதவ என்று தெரியாமல் உதவிச்சிறகுகளை சுருக்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கே
இந்த மடல். உதவ வேண்டிய திசையை நான் காண்பிக்கிறேன். உதவிட முன்வருவீர்களா?
நிலாரசிகன் கவிதைகள் யாகூ குழுமத்தில்
(nilaraseegankavithaigal yahoo group) 4000க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருவர் 1 ரூபாய் கொடுத்தால் கூட 4000 நம்பிக்கை விதைகளை விதைப்பதாக உணர முடியும்.
இந்த மடலை உங்கள் நண்பர்களுக்கு / தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள் (Forward) அதன் மூலமாகவும் உதவிகள் வரலாம்.
இத்தளம்
(www.helptolive.org) பற்றி அல்லது பணம் அனுப்புவது பற்றி ஏதேனும் சந்தேகமிருந்தால்
எனக்கு மடலிடுங்கள்.
நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.
அள்ளித்தர நட்புடன்,
நிலாரசிகன்.
"தமிழுக்கு நிலவென்று பேர்"
குழுமம் -->
http://in.groups.yahoo.com/group/nilaraseegankavithaigal/
கவிதைகள் வலைப்பூ -->
http://nilaraseegan.blogspot.com/
சிறுகதைகள் வலைப்பூ -->
http://nilaraseegansirukathaigal.blogspot.com/
மழலைகளுக்காக -->
http://www.helptolive.org/