Contents of RSS feed for:
Creating Tamil mail message
You can continue to read this page, irrespective of whether you have read and understood the contents of the help file, provided you understood the steps indicated in the last page. Before sending an email message in Tamil you should first create the contents of the mail in Tamil. Email can be sent using several ways, using Azhagi. We will see each one of those procedures herebelow.
Published: Mon, 05 Jul 2010 10:51:07 GMT
வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் 1
வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் 2
வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் 3
வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் 4
வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் 5
வானம் எனக்கொரு போதிமரம் - அத்தியாயம் 6
Published: Mon, 05 Jul 2010 10:49:48 GMT
அன்பு நேயர்களுக்கு ஒவ்வொரு வியாளனும் ஜெர்மனி நேரம் மாலை 6.20 மணிக்கு ரி.ஆர்.ரி.தமிழ்ஒலி வானொலி "குயில்தோப்பு" என்ற நிகழ்ச்சி தொகுத்து வளங்குகின்றேன்.
குயில் தோப்பில் பல சுவாரிசியமான நிகழ்ச்சிகள் உலாவரும். தமிழ்ஒலி வானொலி "குயில்தோப்பு"
Published: Mon, 05 Jul 2010 10:48:03 GMT
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழில் காணக் கிடைக்கின்ற நூல்களில் மிகப் பழமையானதான தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். அது மொழிக்கு இலக்கணம் கூறுவதோடு அம்மொழியினைப் பேசும் மக்களின் வாழ்வுக்கும் இலக்கணம் கூறியிருப்பதைக் காணும்போது வியப்பு மேலிடாமல் இருக்க முடியாது. மக்களின் அக மற்றும் புற வாழ்க்கைக்குப் பொருள் இலக்கணம் கூறும் தொல்காப்பியத்தில் வாழ்வியலுக்கு உதவும் மேலாண்மை பற்றிய செய்திகள் கூறப்படுவதும் இயல்புதானே!
Published: Mon, 05 Jul 2010 10:45:35 GMT
மனம் நிறைய சந்தோஷ மத்தாப்பாய்
வெள்ளை சிரிப்பில் கொள்ளை கொள்ளும்
உன் கள்ளமில்லா குணத்தில் என் மனம் நிறைய...
அன்புக்கணை எறிந்தேன், உன் மனம் நோக்கி..
Published: Mon, 05 Jul 2010 10:41:24 GMT
என் வீட்டில் உள்ளோருக்கும்
என் சொந்தங்கள் எல்லோருக்கும்
அம்மாவின் ஒரு வார்த்தைதான்
ஆண்டவனின் திரு வார்த்தை
அம்மாவை சுற்றித்தான் இங்கே
அனைவரும் சுழன்று வருவோம்
Published: Mon, 05 Jul 2010 10:39:31 GMT
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே
எனும் தாயுமானவரின் கருத்தை தற்கால உலக நிலைக்கேற்ப அனைவரும் எளிதில் புரிந்து கொண்டு செயல்படும் விதத்தில் மனவளக்கலை எனும் சிறந்ததொரு மார்க்கத்தை உலகுக்கு உபதேசித்தவர் அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி. அவர் அருளிய உன்னதமான பிரார்த்தனைகள் சாதி மத பேதமின்றி அனைவராலும் பின்பற்றப்படத் தக்கவை.
Published: Mon, 05 Jul 2010 10:37:23 GMT
ஒரு பாதிரியார் சர்ச்சிலிருந்து வீடு திருமப ஆயத்தமானார். அன்று சனிக்கிழமை. மனைவியை தொலை பேசியில் அழைத்து தான் புறப்பட்டு விட்டதாக தகவல் சொல்லுவோம் என்று ஃபோனில் அழைத்தார். மணி அடித்துக்கொண்டிருந்ததே தவிர அவர் மனைவி ஃபோனை எடுக்கவே இல்லை. பல தடவை கூப்பிட்டும் மனைவி லைனில் வராதது கண்டு மறுடியயும் அழழைப்பதை விட்டுவிட்டு, கடைசியாக எல்லாம் ச்ரியாக உள்ளதா என்று பார்த்துவிட்டு கிளம்பினார்
Published: Mon, 05 Jul 2010 10:34:37 GMT
இட ஒதுக்கீடு விஷயத்தில் அக்கறை காட்டுபவர்களையும், ஏதோ அதில் சில % வெற்றி பெற்றபின் அதனைக் கொண்டாடுபவர்களையும் நினைத்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகின்றது.
இந்திய பூமியில் பிறந்த ஒவ்வொரு மனித உயிர்ப் பிறப்பிற்கும் அது விரும்பியதைச் செய்திட முழு உரிமை உண்டு. இதுவே பொது விதியாக இருக்க வேண்டும்.
Published: Mon, 05 Jul 2010 10:33:29 GMT
வாழ்வில் முன்னேறும் வழிகள் குறித்து என் மனதின் ஆழத்தில் பதிந்துள்ள பல கருத்துக்களையும் இவை தொடர்பான சம்பவங்களையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் ஆவலில் இக்கடிதத்தைத் தொடங்குகிறேன்.
"முதலில் நீ வாழ்வில் முன்னேறி விட்டாயா?" என்று என்னைக் கேட்டிர்களெனில் நான் ஆணித்தரமாகக் கூறுவேன், "ஆம்" என்று.
Published: Mon, 05 Jul 2010 10:30:52 GMT
அன்பின் வழியே அறவழிதம்பி
என்பதை மனதிில் என்றும்வைத்திடு!
அன்பே கடவுள் என்றார் அண்ணல்
அன்பால் உலகை வென்றிடு என்றார்!
Published: Mon, 05 Jul 2010 10:28:34 GMT
ஒரு நாள் எதோ கோபம். திவ்யாவை திட்டி விட்டேன். இரண்டு நிமிடத்திற்குப் பிறகு என்னிடம், அப்பா, கோபப் படாதப்பா. சாரிபா. பாப்பா இனிமே குறும்பு பண்ண மாட்டேன். சாரிப்பா.
இதேபோல், மற்றொரு நாள், அவள் அம்மாவிடம் எதோ கேட்டு இருக்கிறாள். வேலை மும்முரத்தில் அவள் கண்டுகொள்ளவில்லை, உடனே "ப்ளீஸ்மா, பாப்பா பாவம், ப்ளீஸ்மா, கொடுமா" என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாள். இதை நாங்கள் சொல்லி தந்தது இல்லை. அவளாகவே கற்றுக்கொண்டு இருக்கிறாள்.
Published: Mon, 05 Jul 2010 10:27:02 GMT
பக்தி என்றாலே நம் கண் முன் வரும் தோற்றங்களுள் முதன்மையானது கையில் தம்பூருடன் கண்களில் ஆனந்த பாஷ்பத்துடன் ஆன்மாவையே உருக்கும் தோற்றம் கொண்ட இருக்கும் தியாகைய்யர் என்கிற தியாகராஜன் என்கிற தியாகப் ப்ரும்மம்தான், அவர் வீட்டு வாயில் திண்ணையில் அவர் அமர்ந்திருக்கிறார். நாம் அந்த மகானை தரிசிக்க அவர் வீடு நோக்கி செல்கிறோம். நாம் நெருங்க நெருங்க அவர் பாடும் ராமநாமம், தம்பூரின் ஒலி நயத்தோடு நம் காதுகளில் கேட்க ஆரம்பிக்கிறது.
Published: Mon, 05 Jul 2010 10:24:33 GMT
கோபம் என்பது மிகக்கொடியது. கோபம் உடலுக்கும் தீங்கு விளைக்கிறது. ஆனாலும் எல்லோரையும் கோபம் வளைத்துப் போடுகிறது அதிலிருந்து மீள முடியவில்லை. கோபம் வரும் நேரத்தில் அந்த இடத்தை விட்டு நழுவி விட வேண்டும் அல்லது ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் இல்லையென்றால் இரண்டு முட்டிகளும் மடக்கி ராமநாமம் அல்லது சிவநாமம் சொன்னாலும் கோபம் குறைந்துவிடும்.
Published: Mon, 05 Jul 2010 10:22:31 GMT
"என்ன நீ பெரிய ஜாம்பவனாக்கம். ரொம்ப ஸ்டைல் போடாதே." என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆமாம் யார் இந்த ஜாம்பவான்? ராமாயணத்திலும் இந்த ஜாம்பவான் வருகிறார், அதாவது த்ரேதா யுகத்திலும் வருகிறார், அதே போஒல் கிருஷ்ண பகவான் பிறந்த துவாபர யுகத்திலும் இவர் வருகிறார், பெயரும் மாறவில்லை, அதே ஜாம்பவான் தான்.
Published: Mon, 05 Jul 2010 10:21:21 GMT
One day a young man was standing in the middle of the town proclaiming that he had the most beautiful heart in the whole valley. A large crowd gathered and they all admired his heart for it was perfect. There was not a mark or a flaw in it. Yes, they all agreed it truly was the most beautiful heart they had ever seen. The young man was very proud and boasted more loudly about his beautiful heart.
Published: Mon, 05 Jul 2010 10:16:59 GMT
1. கிழக்கே பார்த்து உட்கார்ந்து சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகும்.
2. பகல் சாப்பாட்டிற்கு முன் ஒரு பிடி சாதத்தை காக்கைக்கு போடுங்கள், காக்கை சனீஸ்வருடைய வாகனமாகையால் நலம் தரும்.
3. உள்ளங்கையின் அடிப்புறத்தில் பார்வதியும் மத்திய பகுதியில் சரஸ்வதியும், விரல் நுனிகளில் லக்ஷ்மியும் இருக்கிறார்கள்.எனவே காலையில் கண் விழித்ததும் முதலில் உங்கள் உள்ளங்கையை பாருங்கள்
Published: Mon, 05 Jul 2010 10:15:11 GMT
ஆண்டின் முதல் மாதமே முஹர்ரம் ஆகும். இம்மாதத்தின் 10-ஆம் நாளை ஆஷுரா தினம் என்றும் முஹர்ரம் என்றும் கூறுவர். இநாளில் நோன்பு நோற்பதே சாலச் சிறந்தது. இஃது ஒரு நினைவு நாள் ஆகும். பெருநாளாகவோ அல்லது பண்டிகையாகவோ கொண்டாட வேண்டியது கிடையாது.
அண்ணல் நபிகள் மறைந்த பிறகு, கர்பலா என்ற போர்க்களத்தில் அவரது பேரர் ஹுஸைன் உயிர் நீத்ததும் இதே முஹர்ரம் 10-ஆம் நாளே ஆகும். இஸ்லாமிய மக்களாட்சியை ஏற்படுத்திடவே இந்தப் போர் நடந்தது. இதனால்தான் இந்நாள் சிறப்புப் பெறுகின்றது.
Published: Mon, 05 Jul 2010 10:13:06 GMT
நெல்லின் இலையினை
மெல்லிய நராய்க் கிழித்தே
பின்னிடுதே அழகாய்த் தன்
கூட்டை பார்ப்பவர் வியந்திடத்
தூக்கணாங் குருவி
Published: Mon, 05 Jul 2010 10:12:15 GMT
முகம் காட்டிய நாள் முதலாய்
முழுப் பராமரிப்பில் வளர்ந்தது.
விருட்சத்தின் கதை வழிவழியாய்
வம்சச் சொத்தாய், பொக்கிஷயமாய்.
தேவாதி தேவர்களும், மூவரும் அவர்
தேவியரும் தேடியது இதைத்தான்.
வேனலிலும், வாடைக்காற்றிலும்
வளைந்து கொடுத்து இடம் பிடித்தது.
Published: Mon, 05 Jul 2010 10:11:19 GMT
சின்னக்குயில் சிந்துஜா - தமிழ்த்தேனீ
Published: Mon, 05 Jul 2010 10:09:24 GMT
நீங்க ஒங்க ஊட்டுலெ ஒரு மாடு வெச்சிருக்கீங்கன்னு வெச்சுக்கோங்க. அந்த மாடு போடுற சாணியெ ஒரு பக்கமா சேத்து வெச்சிருந்தீங்கன்னா அது கொஞ்ச நாளெய்க்கப்புறம் நல்ல உரமா மாறீடூதுங்க. இதெத்தான் தொழு உரம்னு சொல்லுறாங்க.
மாட்டு சாணம் மட்டும் இல்லீங்க. மூத்திரமும் உபயோகமாகுனு சொல்லுறாங்க இயற்கை விவசாய நிபுணருங்க. மாட்டு மூத்திரம் நல்ல பூச்சி கொல்லி மருந்து தயாரிக்க உதுவும்னு சொல்லுறாங்க அவங்க.
Published: Mon, 05 Jul 2010 10:07:41 GMT
தாமரை இலைத் தண்ணீ ரெனெத்
தான் இருந்திடல் வேண்டும் நீர்
பாரினில் உள்ளோர்க் கெல்லாம்
சாமரம் வீசிடும் தென்றலென
பாமரர்க்கும் பரிவு
காட்டிடல் வேண்டும்
Published: Mon, 05 Jul 2010 10:05:47 GMT
மேகம் கருப்பது எதனாலே
வானம் பொழிவது எதனாலே
சிந்தனை செய்திடு நீ மனமே
நிந்தனை விட்டொழி நீ தினமே
Published: Mon, 05 Jul 2010 10:04:49 GMT
அம்மா அறிமுகம் செய்து வைத்த ஆண்மகனே
ஆளுயர மாலையெல்லாம் அண்டி உன்னை
வந்தடையும் ஆளுமை கொண்டவனே
ஆயிரம் தான் அம்மா செய்தாலும்
Published: Mon, 05 Jul 2010 10:03:29 GMT
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
Published: Mon, 05 Jul 2010 10:02:27 GMT
திடீரென
தென்றல்க் காற்று மெதுவாய்த்
தவழ்ந்து வரவே
ஆட ஆரம்பிக்கிறது கிளைகள்;
கூடவே இலைகளும்
Published: Mon, 05 Jul 2010 10:01:25 GMT
தன் வாழ்நாள் உள்ள வரை உலக நன்மைக்காகவே பாடுபட்டு அம்முயற்சியில் உலகெங்கிலுமுள்ள நன்மக்கள் பலரையும் ஒருங்கிணைத்து மனவளக்கலை மன்றம் எனும் அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்ட அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி மனித குலம் உய்வதற்காக உடலையும் உள்ளத்தையும் முறைப்படி பேணிக் காக்க சிறந்ததொரு மார்க்கத்தை அருளிச் சென்றார். அவர் ஏற்படுத்திய உடற்பயிற்சி பற்றியும் தியானம் பற்றியும் அவரே விரிவாக எழுதிய நூல்கள் உலகெங்கிலும் உள்ள மனிதர்கள் படித்துப் பயன் பெற ஏதுவாக உள்ளன.
Published: Mon, 05 Jul 2010 10:00:33 GMT
மனித வாழ்வில் மிக வினோதமானது அதன் முடிவாகும். இப்படித்தான் முடியும் என்று யாராலும் அறுதியிட்டுக் கூறவியலாதது மனித வாழ்வின் முடிவு. ஆனால் விண்மீனின் வாழ்வு எப்போது எப்படி முடியும் என்பதை வரையறுத்துக் கூற முடியும்.பிறக்கும் பொழுது விண்மீனின் நிறை நமக்குத் தெரியும் பட்சத்தில் , முன்னர் குறிப்பிட்டது போல் விண்மீனின் வாழ்க்கைப் பயணப் பாதை மற்றும் அதன் முடிவை வானியலாளர்களால் ஊகித்துக் கூற இயலும்.
Published: Mon, 05 Jul 2010 09:58:34 GMT
நூல் முகப்பும் விமர்சனமும் விவரமும்
எனது புதிய சிறுகதை நூல் பற்றிய விவரம், படம் ஆகியவற்றை மழலைகள்.காம் வாசகர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
நூல் கிடைக்கும் பதிப்பகத்தின் முகவரியும் இப்பக்கத்தில் அளிக்கிறேன்.
வாசகர்கள் படித்துப் பயனடையுமாறு பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி,
ஷைலஜா
Published: Mon, 05 Jul 2010 09:57:24 GMT
அடுத்ததாய் நாம் காண இருப்பது லேனாத்ரி என்னும் ஊரில் உள்ள கிரிஜாத்மஜ விநாயகர் ஆவார். இவரும் புனே நகருக்கு அருகேயே இருக்கிறார். இந்த அஷ்ட விநாயகர் ஆலயங்கள் அனைத்தையும் காணப் புனே சென்று அங்கே தலைமையிடமாய்க் கொண்டு சென்று வரலாம். புனேயில் இருந்து கிட்டத் தட்ட 85 மைல் தொலைவில் நாசிக் செல்லும் வழியில், குக்கா என்னும் நதியின் வடமேற்குக் கரையில் அமைந்துள்ளது லேனாத்ரி என்னும் ஊரும் அங்கே கிரிஜாமத் விநாயகர் ஆலயமும்.
Published: Mon, 05 Jul 2010 09:56:09 GMT
கைகேயியிடம் இருந்து விடை பெற்றதுமே ஸ்ரீராமர் தன் பரிவாரங்களையும், தன் தேரையும், தன் அரச மரியாதைக்குரிய சின்னங்களையும் துறந்து, அம்மாளிகையில் இருந்து கால்நடையாகவே தன் பெற்ற தாயான கோசலையின் மாளிகைக்குச் சென்றார். கூடவே கண்ணீருடன் லட்சுமணன் பின் தொடர்கின்றான்.
Published: Mon, 05 Jul 2010 09:55:05 GMT
சிவகுரு விதிர்விதிர்த்துப் போனார். தேரில் இருந்தது அவருடைய அருமைப் பிள்ளையான சங்கரனே. உடனே திரும்பிக் கையில் தூக்கிக் கொண்டிருப்பது யார் எனப் பார்த்தால், என்ன ஆச்சரியம்? தேரில் இருக்க வேண்டிய மூர்த்தங்கள் அவர் கைகளில். மீண்டும் தேரைப் பார்த்தார் சிவகுரு. தேரில் இருந்த சங்கரன் அவரைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது அவருக்கு.
Published: Mon, 05 Jul 2010 09:54:17 GMT
அந்தப் பட்டையின் வேகத்துக்கு ஏற்ப நாமும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், அப்போதுதான் நாமும் இந்த உலகத்தில் அனைவருடனும் போட்டி போட முடியும், முன்னேற முடியும். ஆகவே நேரம் தவறாமை என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும். நாம எல்லாரும் இது வரைக்கும் செலவழித்த நேரங்கள் இனி மீண்டும் வருமா? ஒவ்வொரு வினாடியும் காலம் நகர்ந்துகொண்டே இருக்கிறது.
Published: Mon, 05 Jul 2010 09:50:53 GMT
தென் மாநிலத்து மக்கள் விவசாயம் ஒன்றையே முக்கியமான தொழிலாக நம்பி இருக்க, மிசிசிபியைத் தங்கள் ஆதிக்கத்துக்குக் கொண்டு வந்த வட பகுதியினர் உணவுப் பொருட்களையும், அத்தியாவசியப் பண்டங்களையும் தெற்கே எடுத்துச் செல்லத் தடையும் விதித்தனர். லிங்கனும் இப்படி இரு பக்கமும் தாக்குதல் ஏற்படுத்துவதை உள்ளூர விரும்பினார்.
Published: Mon, 05 Jul 2010 09:49:51 GMT
ஒரு சமயம் திருச்சியிலிருந்து தஞ்சைக்கு வேலை நிமித்தம் காரில் சென்று கொண்டிருந்தேன். திருச்சி நகர எல்லையைக் கூடத் தாண்டவில்லை. என் முன்னே பறந்து சென்று கொண்டிருந்த ஒரு பறவை திடீரெனத் தரையில் விழுவதைப் பார்த்தேன்.
Published: Mon, 05 Jul 2010 09:49:06 GMT
மயக்கமுற்றுக் கீழே விழுந்த சங்கிலியாரைக் கண்ட பெற்றோர் வேதனை அடைந்தனர். அவர் மயக்கத்தைத் தெளிவித்து அவரை மயக்கத்தின் காரணத்தை விசாரித்தனர். தாம் அருமை, பெருமையோடு வளர்த்து வந்திருக்கும் தம் மகளின் மனதில் தங்களையும் அறியாமல் புகுந்திருக்கும் குறையை அறிய எண்ணினர் பெற்றோர்.
Published: Mon, 05 Jul 2010 09:46:49 GMT
இத்தகைய பெருமை வாய்ந்த முனி சிரேஷ்டர் ஆன வியாசரின் வருகையால் மதுரா நகரே குதூகலம் கொண்டது. யமுனைக்கரைக்கு அவரை வரவேற்க அக்ரூரர் சென்றார். முனிவர் படகிலிருந்து இறங்கும்போது, அவருடன் கூடவே ஒரு விவேகியான முகத் தோற்றத்துடன் கூடிய இளைஞன் ஒருவனும் இறங்குவதைக் கண்டார் அக்ரூரர். மிக நீண்ட தாடியுடன் இருந்த வியாசர், கண்களாலேயே சிரித்தார், அக்ரூரரைக் கண்டு.
Published: Mon, 05 Jul 2010 09:45:24 GMT
முன்னொரு காலத்தில் பணக்கார துணி வியாபாரி ஒருவன் இருந்தான், பணக்காரனாக இருந்தாலும் படும் கஞ்சன். அவனிடம் வேலை செய்தவர்கள் அனைவரும் படும் முட்டாள்கள். எங்கே புத்திசாலிகளை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுக்கணும் என்றும், தன்னிடமே படித்து எங்கே தனக்கு போட்டியாக வியாபாரம் தொடங்கிடுவாங்கன்னு நினைத்தான்.
Published: Mon, 05 Jul 2010 09:13:21 GMT
வாழ்க்கையில் ஒரு ஆத்மீகக் குறிக்கோள் இல்லாமல் வாழும் ஒருவனுக்கு மனச்சாந்தி என்பது என்ன எனப் புரியாது அப்படிப் புரியாதவனுக்கு சந்தோஷம் எங்கிருந்து வரும்? ஸம்ஸாரம் எனும் கடலில் வாழ்க்கை எனும் ஓடத்தில் ஞானம் எனும் சக்கரத்தை இயக்கி ஆத்மீகம் எனும் குறிக்கோளான கலங்கரை விளக்கத்தை நோக்கிப் பயணம் செய்ய ஒரு ந்ல்ல மாலுமி தேவை. அதுவே தீக்ஷணமான ஸ்திரமான ஒருநிலைப்பட்ட புத்தி
Published: Mon, 05 Jul 2010 09:11:19 GMT
ஒருவன் தானம் செய்யாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் பிறர் செய்கின்ற தருமத்தைக் கெடுப்பவனுக்கு அப்போதே தண்டனை கிடைக்கும் என்கின்ற உண்மையை இந்த உலகிற்கு உணர்த்தும் பொருட்டு ஒன்றும் தெரியாதவர் போல் ஏன் நீர் அடைத்துக் கொண்டுவிட்டது? என்று கெண்டியின் துவாரம் வழியாக உள்ளே பார்த்தார், சுக்கிரன் வண்டு உருவத்தில் கண்களைச் சுழற்றிக் கொண்டிருந்தார். வாமனர் ஒரு சிறு தர்ப்பைப் புல்லை எடுத்து வண்டு உருவில் இருந்த சுக்கிரனின் கண்ணைக் குத்திக் கிளறினார்.
Published: Mon, 05 Jul 2010 09:09:56 GMT
கரிச்சான் குருவிக்கு பயம் என்பதே துளியும் கிடையாது. இது தன்னைவிட உருவத்திலும், பலத்திலும் பெரிதான காகம், கழுகு, பருந்து போன்ற பறவைகளைத் துரத்தித் துரத்தி விரட்டும். அந்தப் பறவைகளும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று திரும்பிப் பாராமல் அதி வேகமாகப் பறந்து செல்லும். இந்தக் காட்சி பார்க்க வேடிக்கையான ஒன்று. King crow என்ற பெயர் வரக் காரணம் இதுவே.
Published: Mon, 05 Jul 2010 09:03:00 GMT
The URL to provide to an RSS aggregator when subscribing to this feed:
(For more information about RSS see:
What is RSS?.)