பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பாட்டி
அத்தியாயம் 17
மாகத ரிஷியின் மகன் கஜாசுரன் என்பவன். அவன் ரிஷி புத்திரனாக இருந்தாலும், அவன் தோழர்கள் அனைவருமே அரக்கர்களாக இருந்தமையால் அவனுக்கும் அரக்க குணமே மேலோங்கி இருந்தது. அனைவரையும் துன்புறுத்தி வந்தான். முக்கியமாய் அவனைப் பார்ப்பவர்கள் அனைவருமே தலையில் குட்டிக் கொண்டு தோர்பி கரணம் போட்டுக் கொண்டு வணங்க வேண்டும் என ஆணையே பிறப்பித்திருந்தான். இந்த கஜாசுரன் ஒரு முறை விண்ணில் பறந்து கொண்டிருந்த போது, தன் வலிமையைக் காட்டுவதற்காக அண்டச் சுவர் ஒன்றை இடித்துத் தள்ள, ஆகாய கங்கை பொத்துக் கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்தது. அத்தனை வெள்ளமும் அனைத்து உலகங்களையும் மூழ்க அடிக்க, உலகே ஜலப் பிரளயத்தில் மிதந்தது. அண்ட சராசரமும் வெள்ளத்தில் மூழ்க அனைவரும் கதி கலங்கினார்கள். என்ன செய்வது எனத் திகைத்தனர். பூலோகத்தில் ஒரே ஒரு இடம் மட்டுமே மூழ்காமல் இருக்கவே, அனைவரும் அதிசயத்துடன் அங்கே வந்து ஒதுங்கலாம் என நினைத்து வந்து பார்த்தனர்.
அங்கே விநாயகர் வீற்றிருந்தார். உடனேயே தேவர்கள் அனைவரும், விநாயகரைத் துதித்து வணங்க, விநாயகரும் தம் துதிக்கையால் அனைத்துப் பிரளய நீரையும் உறிஞ்ச, வெள்ளம் வடிந்தது. தேவர்கள் கஜாசுரனைப் பற்றிச் சொல்ல விநாயகர் அவனுடன் போரிட்டு வென்று, அவனைத் தன் வாகனமாக மாற்றிக் கொண்டார். இந்த விநாயகர் "கலங்காமல் காத்த விநாயகர்" என்ற பெயருடன் தஞ்சை மாவட்டம் ஆலங்குடியில் இடம் பெற்று அருள் பாலித்து வருகின்றார். இன்னும் விநாயகரால் காவிரி நதி பெருக்கெடுத்து ஓடிய வரலாற்றை அடுத்துக் காணலாம்.
அன்புடன்
கீதா சாம்பசிவம்
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















