படைப்புகள்




Favorites

Picture Puzzles

Achalam.com
AKR Consultants
Young Poet.org
RCC pipes.com
Brahmin Today.org
ACOE.co.in
Ruralseva.com
Healthcareall.org
Kalakad.org
CIT76.com
Mazalais.com
Artistkidworld.com
Thamizhisai.com
Peopleofindia.net
Astrotimers.com
EducationalService.net
tamilliterature.net

kavithai kuyil
Pillaiyar
Thamiz Thenee
Positive Anthony

CIT India.com
Airomatic Systems
KTVR.com
Nilacharal.com
Societal Support
Tamilunltd.com
Mgl Authors



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Children Sites


வெளியே

Grandpa Cheenu
தமிழ் அநிதம்
Positive Anthony
Mazalais Blog
Tamil Software
தமிழ்த்தேனீ
மீராம்பிகை
கீதா சாம்பசிவம்
காலனை வென்றவன்
அன்புடன் அருணா
நிலாச்சாரல்
They Link Us
Learn Tamil
Tamil University
Cultural India
தமிழிதழ்கள்
Answers
The Hindu
Dictionary
Geography
Downloads
Knowledge
Linking Back
Special Links
Encyclopedia
Mazalais Blog
E-mail Services
Tamilwire.com
Hi Gopi.com
Sify.com
Digital Flash Clock
Vrishin Vigneshwar

  Website dedicated to Education of Children

Tamil-English bilingual webmagazine
 Children of today are the future Leaders     Bring out the child in you
Learn to Produce Tamil contents in ALL Windows applications
Enable unicode And Set Unicode Encoding to view Tamil contents

We use     Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications - the Easiest and Fastest
Tamil Transliteration Software.
menu bar

மழலைகள்








 



பெருமை வாய்ந்த பிள்ளையார்

பிள்ளையார் பாட்டி

அத்தியாயம் 13

விநாயகர் பற்றிய பல்வேறு புராணக் கதைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவற்றில் பிரம்மா விநாயகரைப் பூஜித்த வரலாறு வருமாறு:

Brahma - image: Wikipedia

படைப்புக் கடவுள் ஆன பிரம்மா தன் படைப்புக்களில் பெருமிதம் கொண்டு, தன்னாலேயே அனைத்தும் நடக்கின்றன என்று ஆணவம் கொண்டார். இந்த ஆணவத்தோடு அவர் படைத்த படைப்புக்கள் பின்னமாகிக் கொண்டு வந்தன. தொடர்ந்து இம்மாதிரிப் பின்னமான படைப்புக்கள் ஏற்படவே பயந்து போனார் பிரம்மா. தன்மேல் என்ன தவறு என யோசித்த போது, அவர் மனதில் தோன்றியது விநாயகருக்கு வழிபாடு செய்வதை நிறுத்தியது தவறு என உணர்ந்தார். உடனேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, விநாயகரை நினைத்துத் தியானத்தில் அமர்ந்து முழு மனதோடு அவரைத் தியானித்தார். பிழை உணர்ந்த பிரம்மாவைச் சோதிக்க விரும்பாத விநாயகர் அவர் முன் தோன்றி தமது சக்திகள் ஆன இச்சா சக்தி, ஞான சக்தி இரண்டையும் பிரம்மாவுக்கு அளித்து இவற்றின் உதவியோடு படைப்புத் தொழிலைச் செய்து வரும்படி ஆசி வழங்கினார். படைப்புத் தொழிலை ஆரம்பித்தார் பிரம்மா. விநாயகர் கொடுத்த இரு சக்திகளையும் இரு பெண்களாய் மாற்றி வளர்த்து வந்தார்.

கணபதியின் சக்திகள் கணபதியிடமே போய்ச் சேர வேண்டிய வேளை வந்து விட்டது என உணர்ந்த பிரம்மா, நாரதரை அனுப்பிக் கைலையில் சிவபெருமானிடமும், உமை அம்மையிடமும் விவரத்தைச் சொல்லி வருமாறு அனுப்பி வைத்தார். நாரதரும் கைலை சென்று அம்மை அப்பனிடம் விஷயத்தைத் தெரிவிக்க, மனம் மகிழ்ந்த அம்மை, அப்பன் இருவரும் சித்தி, புத்தி என்ற பெயருடன் வளர்ந்து வந்த அந்த இரு பெண்களையும் கணபதிக்கு மணம் முடிக்கலாம் என்று சொல்லவே, பிரம்மாவும் சந்தோஷத்துடன் உடன்பட்டார். அவ்வாறே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிச்சயிக்கப்பட்ட சுப முகூர்த்த நன்னாளில், சித்தி, புத்தி என்னும் தம் சக்தி தேவிகள் இருவரையும் கணபதி திருமணம் செய்து கொண்டார். நம் தென்னாட்டைப் பொறுத்த வரை கணபதி பிரம்மச்சாரி. ஆனால் வடநாட்டில் அவர் திருமணம் செய்து கொண்ட குடும்பஸ்தர். அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு ஒரு பெண்ணும் உண்டு. அந்தக் கதை வரும் நாட்களில்.

Siddhi-Buddhi Vinayaga - image exoticindiaart.com

இது போலவே விஷ்ணுவும் விநாயகரைப் பூஜித்தே மது, கைடபர் என்னும் இரு அரக்கர்களைச் சம்ஹாரம் செய்ததாகவும் வரலாறு உண்டு. பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனின் காதுகளில் இருந்து தோன்றிய இரு அரக்கர்கள் மது, கைடபர் என்னும் இருவர். தோன்றிய கணத்திலேயே அசுர வடிவெடுத்து மூவுலகையும் அச்சுறுத்தி வந்தனர் இருவரும். நான்முகனிடம் சென்று முறையிட்ட தேவர்களை, மகாவிஷ்ணு ஒருவரே இவர்களை அழிக்கத் தகுதி படைத்தவர், ஆகவே அவரிடம் சென்று முறையிடுவோம் என பிரம்மா அவர்களை அழைத்துக் கொண்டு மகாவிஷ்ணுவிடம் வந்து முறையிட்டார். நடந்ததை அறிந்த அனந்த சயனன், தேவர்களுக்கும், பிரம்மாவுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு, மது, கைடபர்களுடன் போருக்குச் சென்றார். ஆயிரக் கணக்கான ஆண்டுகள் யுத்தம் செய்தும் மது, கைடபர்களை மகா விஷ்ணுவால் அழிக்க முடியவில்லை. வெற்றி. தோல்வி இன்றி நீடித்த இந்த யுத்தத்தில் ஏதோ குறை என உணர்ந்த மகாவிஷ்ணு தன் மாயையால் அவ்விடத்தை விட்டு மறைந்து கைலை சென்று ஈசனிடம் வேண்ட, ஈசனும் வேழ முகத்தானை மறந்தது தான் தாமதத்துக்குக் காரணம் என்று சுட்டிக் காட்டினார். ஈசன் சொன்னது போல் விநாயகரை பூஜிக்க பூமிக்கு வந்தார் மகாவிஷ்ணு. மூலப் பொருளை மனதில் வைத்து முழு மனதுடன் பூஜிக்க மகிழ்ந்த விநாயகர் அசுரர்களை அழிக்கும் பராக்ரமத்தை விஷ்ணுவுக்கு அளித்து அருளினார். பின்னர் களம் இறங்கிய எம்பெருமான் நாராயணன், மது, கைடபர்களை அழித்தான் என்கிறது விநாயக புராணம்.

அன்புடன்

கீதா சாம்பசிவம்

தொடரும்...

அத்தியாயம் 12 அத்தியாயம் 14



             

Your Feedback


Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button