மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
akr
|
தமிழ்க் கவிதைகள்பொதிகை மலையில் பிறந்து, சங்கத்தில் வளர்ந்து, சங்கீதத்தில் மிதந்து, இன்று கணினியினுள் குடிபுகுந்து உலகமெலாம் பரவிவரும் தமிழ் மொழியின் சுவையை எல்லோரும் முழுமையாய் உணர, தமிழ்க் கவிதைகளே பிரதான மார்க்கம். வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் தமிழ் மொழி வளர்ச்சி பெறுவது மற்ற மொழிகளுடன் அது இணைந்து செயல்படும் விதத்தைப் பொறுத்தது. ஆகவே தூய தமிழில் தான் பேச வேண்டும், எழுத வேண்டும், வட மொழி போன்ற பிறமொழிச் சொற்களைத் தமிழுடன் கலக்கலாகாது எனும் கருத்து மரபு வழி இலக்கியத்திற்குப் பொருந்தும். ஆனால் தமிழுக்குப் புதிய பாதையைத் தந்துள்ள இணைய வழித் தொடர்புக்கு இக்கட்டுப்பாடு இடையூறாக இருக்கும். மேலும் மஹாகவி பாரதியார் வகுத்துத் தந்த வசன கவிதை இலக்கணத்தை வழி காட்டியாகக் கொண்டு பொருள் பொதிந்த புதுக் கவிதைகள் தமிழ்கூறும் நன்மக்கள் பலரின் படைப்பில் உருவாகியுள்ளன.இவ்விணையதளம் கவிதைகள் பகுதியில் இத்தகைய அனைத்துக் கவிதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதோடு, ஆங்கிலக் கவிதைகளையும் பிரசுரிக்க விழைகிறது. குழந்தைகளுக்குப் பிரதானமான இடம் கொடுத்து அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு உதவும் வகையில் குழந்தைகள் எழுதும் தமிழ், ஆங்கிலக் கவிதைகள் இடம்பெறுகின்றன.
English PoemsMany children of today are capable of writing good poems in English. It is our pleasure to publish these poems apart from poems of eminet poets.
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |