மழலைகள்.காம்

Children of today are the future Leaders

Bring out the child in you
Produce Tamil contents in ALL Windows applications CLICK HERE
Enable unicode to view all Tamil contents of this site CLICK HERE
Tamil Fonts Converter CLICK HERE
Download Azhagi Tamil Software @ Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications
 

பக்தி

பார்வமணி

 

உள்ளே
இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்
Net Granny
Philosophy
Religion
Entertainment
Arts
Education
Knowledge
Management

மானிட ஜென்மம்

உலகில் ஜீவராசிகள் ஸ்ருஷ்டியானதிலிருந்து படிப்படியாக பல ஜீவன்களை அடைந்து, இப்பொழுது பெறும் பேற்றை எய்தற்குறிய மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். இந்த உயர் பிறவியை, மறு ஜன்மம் எடுக்க வேண்டியிருந்தால் காப்பாற்றிக்கொள்ளவும் அல்லது இதை விட மேன்மையான பதவியை, அதாவது பிறப்பில்லாமையை அடைவதற்கான வழிமுறைகளில் நம் காலத்தை செலவிடுவதுதான் நாம் இந்த மனிதப் பிறவி எடுத்ததின் பயனாகும் (அதாவது நோக்கமாகும்).
Evolution - image courtesy: cbs.dtu.dk
நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போமானால் பிரபஞ்சத்தில் வாழும் ஒவ்வொரு ஜீவராசியும் அதன் இயல்புக்கு ஏற்ற முறையில் நிறைவுள்ள பூரணத்வத்தை அடைய முயற்சி செய்வது புலனாகும். புல், பூண்டு, மரம், பறவை மற்றும் மான் முதலிய பிராணிகள் ஒரு வரையறுக்கப்பட்ட அமைப்பில் செயல்படும்போது, உற்பத்தி செய்யும் திறமை ( creative power) உடைய மனிதன் தன்னுடைய முயற்சியாலும் மன உறுதியாலும் நிறைவு காண வேண்டாமா? என்கிறார் டாக்டர். ராதாகிருஷ்ணன்.

மேலும் இந்த முயற்சி, உடல், மனம், ஆத்மா இவை மூன்றையும் ஒன்றுபடுத்துவதில்தான் இருக்கிறது. உடல் என்பது ஸ்தூல உருவத்தில் காட்சி தரும் மனமேயாகும். மனம் நுண்ணிய அடுக்குகள் கொண்டது. மனிதன் தன் உடலை முற்றும் அடக்கி ஆளும் சக்தி பெறும்போது அவனுடைய மனத்தையும் அடக்கும் சக்தி பெறுகிறான். மனிதன் இன்று ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குப் போகக்கூடிய சூழ்நிலையில் ஒரு முடிவு பெறாத சோதனைப் பொருள் என்கிறார் டக்டர். ராதாகிருஷ்ணன். அவன் விழிப்படைந்தால் புதிய முறையில் சிந்திக்கவும் செயல்படவும் செய்வான்.

Charles Darwin - image courtesy: Wikipedia
இந்த விழிப்புணர்ச்சி பெற (In evolution) அதாவது பரிணாமத்தின் படியில் இன்னொறு படி மேலே செல்ல வேண்டும். மிகுந்த உயர்ந்த ஸ்தானமான பரம்பொருளின் பாதத்தை அடைவதுதான் அது. பல இயற்கை நியதிகளுக்கு மனிதன் உட்படுகிறான். இவன் இந்த நியதிகளைப் பிற பிராணிகளுடன் பகிர்ந்து கொள்கிறான். ஓரே ஒரு நியதியை மட்டும் அவன் பகிர்ந்து கொள்வதில்லை. அவன் நினைத்தால் அந்த நியதியை மீறவும் முடியும் அதுதான் தர்மம் என்ற சட்டமாகும். இந்த தர்மத்திலிருந்து நழுவாமலும், மனிதப் பிறவியைக் காப்பாற்றிக் கொள்ளவும் அவன் கடைப்பிடிக்கவேண்டிய ஒரே வழி எங்கும் நிறைந்த பரம்பொருளை தியானித்து அவன் பாதங்களை அடைய வழி தேடுவதுதான்.

ஏன் தர்மத்திலிருந்து நழுவாமல் தர்மத்தைக் காக்கவேண்டும்?

ஓர் உதாரணம் எடுத்துக்கொள்வோம். இரு நாடுகள் உள்ளன. ஒரு நாட்டின் நாணயம் மற்ற நாட்டில் செலாவணி ஆகாது. ஒரு தேசத்தில் உள்ளவன் சூழ்நிலை காரணமாக அடுத்த தேசத்தில் குடி புக வேண்டியிருக்கிறது. தன்னிடமுள்ள நாணயம் அனைத்தையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. அப்பொழுது பக்கத்து தேசத்துக்காரன் இவனுடைய பணத்தை வாங்கிக்கொண்டு அந்த தேசத்துப் பணத்தை நோட்டுகளாகக் கொடுத்தால் இவன் சந்தோஷமாக எடுத்து செல்வான் அல்லவா? அது மாதிரி நாம் இந்த பூமியில் கொண்டுள்ள பணமும் பொருட்களும் மேல் லோகத்தில் செலாவணி செய்ய முடியாது. அங்கு செலாவணி ஆகக்கூடியது இங்கு நாம் செய்யும் நற்காரியமும் தர்மங்களுமேயாகும்.

Bagavad Geetha
எப்படி மற்ற தேசத்து மனிதனின் உதவி உனக்கு தேவைப்பட்டதோ அதே போல் மேல் தேசமான சொர்க்கத்தை அடைவதற்கு கடவுளின் கிருபை தேவைப்படுகிறது. ஏன் கடவுளை வழிபட வேண்டும்? ஏனென்றால் அவர்தான் இந்த ஜீவராசிகளின் சிருஷ்டிக்கு காரணகர்த்தா. இந்த உலகம் உய்வதற்கும் அவர் தான் காரணம். நல்லதோ கெட்டதோ நாம் செய்யும் செயலுக்காக அது அளிக்கும் பலன்களுக்கும் அவர்தான் காரணம். ஆகையால் அவரை அடைவதுதான் சிறந்தது. மேலும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை நாம் காணமுடியாது. உணரத்தான் முடியும். உதாரணமாக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் உப்பை போடுவோம். அது கரைந்துவிடுகிறது. நம் கண்ணிற்கு உப்பு தெரிவதில்லை.ஆனால் அந்த உப்பு தண்ணீர் பூராகவும் பரவி உள்ளது. மேல் பாகத்திலும், நடுவிலும், கீழ்ப் பாகத்திலும் எங்கிருந்தும் தண்ணீரை ருசி பார்த்தால் உப்பு கரிப்பது தெரியும். உப்பு இருப்பதை ருசியால்தான் உணர முடிகிறது. அதே போல் பரம்பொருளை உணர "பக்தி" தேவைப்படுகிறது.

இதற்கான வழிகள் வேதத்திலும், உபநிஷத்திலும், கீதையிலும் சொல்லப்பட்டுள்ளன. பின் நூற்றாண்டுகளில் தோன்றிய தவ சிரேஷ்டர்களும், மத ஆச்சார்யர்களும் தங்களுடைய தவ வலிமையினாலும், அறிவின் வன்மையினாலும் கடவுளின் சொரூபத்தையும் ஜகத்தின் இயல்பையும் நன்றாக அறிந்து நமக்கு சுலபமாக புரிந்து கொள்ளும் வகைளும் கஷ்டமில்லாமல் லகுவாக செய்யக்கூடிய வகையிலும் வழி வகுத்து தந்துள்ளனர். இங்கு ஒரு விஷயம் கவனிக்கப்படவேண்டும்.என்னவென்றால் பல வழி முறைகளை ஏற்படுத்தியவர்கள் இதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.

Gopikrishna
அவரவர்களுக்கு எது உகந்ததாகப் படுகிறதோ அந்த முறையைப் பின்பற்றலாம். இதுதான் நம் இந்து மதத்தின் ஒரு தனிச் சிறப்பு. பண்டைய காலத்திலிருந்தே இந்தக் கலாச்சாரத்தில் சொல்லி இருப்பது என்னவென்றால் சத்தியத்திற்கு ஒரு குறிப்பிட்ட வழி கிடையாது. ஒரு அமைப்பை எற்படுத்தி, கட்டுப்படுத்தவும் முடியாது, செய்யவும் கூடாது. ஏனென்றால் கட்டுப்பாடு ஒருவருடைய மனத்தை முடக்கி விடுகிறது. வளர்ச்சி அடைய விடுவதில்லை அதனால் தான் இந்து மதம் தனிப்பட்ட ஒருவருக்கு எந்த முறை எளிதாகவும் உபயோகமாகவும் படுகிறதோ அதாவது ஒத்து வருகிறதோ அதை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது.

Lord Ganesh
இதைப் பின்பற்றித்தான் உருவ வழிபாட்டிலும் அவர் அவர் விருப்பத்திற்கேற்ப வணங்குகிறார்கள். கடவுளை அடைய இரு வழிகள் கூறப்பட்டுள்ளன 'யோகம்" ஒரு வழி, "பக்தி மற்றொரு வழி. யோகம் என்ற வார்தை "யுஜ்" சேருவது என்று பொருள் கொண்ட மூல வார்த்தையிலிருந்து வந்தது. இதை கடைப்பிடித்தால் ஜீவாத்மாவானது பரமாத்மாவுடன் இணைகிறது. யோகம் என்றால் (கடவுளுடன்) இணைவது என்று பொருள். இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் ஆரம்பத்திலிருந்து ஒரு வட்டத்தின் வடிவத்தில் படிப்படியாக சென்று மறுபடியும் ஆரம்ப இடமாகிய கடவுளை அடைகிறது.

மனிதன் இந்த வட்டத்தின் போக்கிலேயே சென்று எவ்வளவு ஜன்மாக்களை எடுக்க வேண்டுமோ அவைகளை எடுத்து கடவுளைச் சேரலாம். அல்லது சாந்தமான வகையில் பக்தி (அன்பு) செலுத்துவதின் மூலம் வந்தவழியே திரும்பிச் சென்று கடவுளை அடையலாம். அல்லது, இன்னும் சீக்கிரமாக, வேகமாக எதிர் நோக்கி, யோக முறையில் கடவுளை அடையலாம். இந்த முறை சிறிது கடினமானது. எல்லோராலும் பின்பற்ற முடியாது. ஏன் என்று சிறிது பார்ப்போம்.

( தொடரும்)

( பார்வமணி)

YOUR FEEDBACK FOR THIS ARTICLE
Your name
E-mail Address: *
Your country
Your comments
Do you like to receive Mazhalaigal.com newsletter?
Submit your contents for publication

* Required
Submit your articles One Free Software Every Day Submit Artwork Happy Birthday


Click here to give your Feedback
editor@mazhalaigal.com