தாயென்று கும்பிடடி பாப்பா
- வாழும் முறைமை - கடிதம் 11
அசலம்
அருமை செல்வங்களே,
பித்ருவாக்ய பரிபாலனம் பற்றி நான்கு கட்டுரைகளை பார்த்தீர்கள். அதில் பிள்ளைகள் தாய் தந்தை சொல் தட்டாமல் நடப்பதின் பலனைக் கண்டீர்கள். 4-வது கட்டுரையில் பித்ருவாக்ய ப்ரிபாலனமா அல்லது பித்ருவாகுய லங்கனமா என ஆராயக்கூடிய ஒரு கருத்தையும் பார்த்தோம். அதில் எப்படிப் பார்த்தாலும் அது பித்ருவாக்ய பரிபாலன்ம்தான் எனக் கண்டோம். ஆனால் இதற்கு விதிவிலக்கு ஒன்றைப் பார்க்க வேண்டும். பித்ருவாக்யம் தார்மீகமாக இருந்தால் அதை ஏற்றுச் செய்ய வேண்டும். ஆனால் அது அதர்மமாக அல்லது சாஸ்த்திர விரோதமாக இருந்தால் அதைப் புறக்கணிக்க வேண்டும் எனபதுதான் அந்த விதிவிலக்கு. அதென்ன என்று பார்ப்போமா?
ஹிரண்யகசிபு என்ற ஒரு அரக்கன் அசுர குல ராஜாவாக இருந்தான். அவன் சகோதரனான ஹிரண்யாக்ஷன் என்பவனின் அட்டகாசம் தாளாமல் தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க விஷ்ணு அவனை சமஹாரம் செய்தார். அன்று முதல் ஹிராண்யகசிபு விஷ்ணுவைத் தன் சத்ருவாகக் கருதி அவரை துஷிக்கத் துவங்கினான். அவன் பிரஹ்மனை நோக்கிக் கடின் தவம் செய்து தனக்கு இறவா வரம் வேண்டும் எனக் கோர பிரமா சொன்னார். அதைத் தரத் தமக்கு இயலாது. ஏனெனில் தாமே இறப்பவர்தான். ஆதலால் இதைத் தவிர வேரெதுவும் கேள் எனச் சொல்ல, அவனும் பெகு சாமர்த்தியமாகக் கேட்பதாக நினைத்து இப்படிக் கேட்டான்:
என்னை மனிதரோ மிருகமோ கொல்லக்கூடாது.
இபபடிக் கேட்டதில் தான் நினைத்தபடி ஒருபோதும் சாவு வராது என நினைத்தான். பிரஹ்மனும் அப்படியே என வரம் தந்தார். அன்று முதல் எல்லா உலகிலும் அவன் ஆட்சி புகுந்துவிட்டது. தேவர்கள் விரட்டப் பட்டார்கள். தெய்வம் ஒன்று இல்லை என நாஸ்திகவாதம் புரிந்து ஆலயங்களை அழித்தான். எல்லோரும் தன்னைப் போற்ற வேண்டும், யாரும் இறைவனை, அதுவும் விஷ்ணுவை வணங்கக் கூடாது என அட்டகாசம் செய்தான்.
இது பித்ருவாக்யத்தை லங்கனம் செய்வதாகாதா? ஆம். பிரஹ்லாதன் பித்ருவாக்ய லங்கனம் செய்தான். ஏன்? தந்தை அதர்மத்தை கையாண்டான். தன்னையும் அவ்வழி செல்லத் தூண்டினான். சாஸ்த்திர விரோதமான தந்தையின் கட்டளையைக்கூடப் பின்பற்ற வேண்டாம் என சாஸ்த்திரம் பறை சாற்றுகிறது. தெய்வ நிந்தனை சாஸ்திர விரோதம். இதுதான் பித்ருவாக்ய பரிபாலந்த்தின் விதி விலக்கான தத்துவம்.
குழந்தைகளே, தெய்வத்தையோ, குருவையோ இழிவுபடுத்தும் செயலில் இறங்கக் கூடாது. அது தந்தை சொல்லானாலும் தவிர்க்க வேண்டும் என்ற நீதியைக் கடைபிடிக்க வேண்டும்.
எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.
அன்புடன்
உங்கள் அசலம
ஓம்
அருள் வாக்கு
Date: 11 February 2007
கடிதம்
From
அசலம்
பித்ரு வாக்ய பரிபாலனம் - 4
எனக்கு இரவிலோ பகலிலோ சாவு வரக்கூடாது.
உள்ளிலோ புறமோ சாவு நேரக்கூடாது.
பூமியிலோ ஆகாயத்திலோ சாவு நிகழக்கூடாது.
எந்தவித ஆயுதத்தாலும் எனக்கு சாவு வரக்கூடாது.
Achalam.com
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||




















