Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
Guru Achalam
   படைப்புகள்

Meet our Authors

RoboForm: Learn more...



உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்





தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழும் முறைமை - கடிதம் 9
அசலம்





ஓம்

 

அருள் வாக்கு

Date: 11 February 2007

கடிதம்

From

அசலம்

achalam38@gmail.com

பித்ரு வாக்ய பரிபாலனம் - 2

அருமை செல்வங்களே,

பித்ருவாக்ய பரிபாலனம் என்பதின் கருத்தை சென்ற இதழில் பார்த்தோம். இராமாயணத்தில் ஸ்ரீ இராமன் கடைப்பிடித்த தர்மத்தில் இதுவும் ஒன்று எனப் பார்த்தோம். இதேபோல், இராமாவதாரத்திற்கு முன் பரசுராமாவதாரம் எடுத்தார் மஹாவிஷ்ணு. அவர் தசாவதாரத்தில், ம்த்ஸ்ய, கூர்ம, வராஹ, ந்ரஸிம்ஹம், வாமனன், பரசுராமன், ஸ்ரீஇராமன், பலராமன், க்ருஷ்ணன், கல்கி என்ப் பத்து அவதாரங்கள் எடுத்து துஷ்ட நிக்ரஹம், சிஷ்ட பரிபாலனம் செய்தார். இப்படி ஆறாவதாக எடுத்த அவதாரம் பரசுராமன்.

ஜமதக்னி மஹரிஷிக்கும் அவர் மனைவி ரேணுகா தேவிக்கும் பிறந்த பிள்ளைகளில் ஒருவர் ராமன். ஜமதக்னி மஹரிஷியிடம், காமதேனு என்ற ஒரு பசு இருந்தது. அது நாம் என்ன கோரிக்கை விடுத்தாலும் அதைத் தந்துவிடும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதை கார்த்தவீர்யார்ஜுனன் என்ற ஒரு அரக்கன் திருடிக்கொண்டு போய்விட்டன். பரசுராமன் சினம் கொண்டு அவனை வதைத்து அந்தப் பசுவை மீட்டுவந்தார். ஆனாலும் முனிபுத்திரன் இப்படி சினம் கொண்டு ஒருவரை வதம் சைய்தது பாபமானதால் க்ஷேத்திராடன்ம் செய்து தபஸ்ஸிருந்து தன் பாபத்தைப் போக்க நினைத்துக் கடும் தபம் செய்தான். சிவன் பிரத்தியட்சமாகி அவனுக்கு வரம் தந்து, பாபத்தைப் போக்கி “பர்சு” என்ற ஒரு மழுவைத் தந்தார். அன்றிலிருந்து இராமன் பரசுராமனாக அறியப்பெற்றார்.

ரேணுகா தேவி தன் கணவருக்கு உகந்து, அவரை தெய்வமாக மதித்து, அவருக்கு ஏக பத்னியாக இருந்து சேவை செய்துவந்தாள். அவளுக்கு சக்திகள் இருந்தன. அவள் ஆற்றங்கரை மணலை எடுத்துக் குடமாக உருக்கொடுத்து அந்த வேகாத பானையில் ஜலம் கொணர்ந்து ஜமதக்னியின் பூஜைக்குத் தருவது வழக்கம். அப்படி ஒரு நாள் மண் குடம் பண்ணி ஜலம் எடுக்கும் பொழுது, அந்த ஜலத்தில் ஒரு கந்தர்வனின் ரூபம் பிரதிபலித்ததைக் கண்டு மனம் கவரப்பட்டு உற்று நோக்கினாள். அவள் கந்தர்வனை நேரில் பார்க்கவில்லை. அவன் பிரதிபிம்பத்தை தன் கைஜலத்தில் கண்டாள். அவ்வள்வுதான். இதை ஞானத்ருஷ்டியில் பார்த்த ஜமதக்னி அவள் பாதிவ்ருத்தியம் போய்விட்டது, அவளை வதம் செய்யுங்கள் என தன் பிள்ளைகளிடம் கூற, பரசுரமனைத் தவிர மற்ற பிள்ளைகள் தாய்க்குச் சமம் ஒன்றும் இல்லை, அதனால் தாங்கள் வதம் செய்ய மறுத்தார்கள்.

ஆனால் பரசுராமன், பிதாவின் கட்டளையை சிரம் மேல் தாங்கி அதை நிறைவேற்றுவதே தன் கடமை என, தன் தாயின் சிரத்தை மழுவினால் வெட்டி வீழ்த்தினான். இதைக் கண்டு சந்தோஷமடைந்த ஜமதக்னி மஹருஷி பரசுராமனைப் பார்த்து, நீ பித்ருவாக்ய பரிபாலனம் செய்ததில் நான் திருப்தியடைந்தேன் வேண்டும் வரம் கேள் என்றார். பரசுராமனும் உடனே தன் தாய்க்கு மறு வாழ்வு தர வேண்டுமென வினவ முனிவரும் அருளினார். இன்றும் தமிழ்நாட்டில் ரேணுகா தேவியின் அறுபட்ட சிரம் உருவில் ஒரு பிம்பம் வைத்து மாரியம்மனாக பூஜித்து வருவதாகக் கேள்வி. பரசுராமன் இப்படி வரம்பெற ரேணுகாதேவி உயிருற்று எழுந்தாள்.

தன் பாபத்தைப் போக்கப் பரசுராமன் தபமிருந்து மழுவை சமுத்திரத்தில் வீசி எறிய, அங்கிருந்து ஒரு நகரம் எழுந்தது. அதுதான் இன்றைய கேரள மாகாணம். இப்படி, பித்ருவாக்ய பரிபாலந்த்தின் மஹத்துவத்தை நிலை நிறுத்தினார் பரசுராம்ன். ஆனாலும் அவருக்குத் தீங்கு வரவில்லை. ஏனெனில் உடனெ வரம் கேட்டு மாதாவை மறுபிறவி கிடைக்கச் செய்தான். பித்ருவாக்ய பரிபாலனத்தில் தீங்கிருந்தாலும் அதற்கு மாற்று கிடைத்துவிட்டது. இதிலிருந்து தெரிகிறதா பித்ருவாகிய பரிபாலன்ம் எவ்வளவு முக்கியம் என்று? இதைத்தான் “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” எனக் கூறுகிறார்கள் பெரியோர்கள்.

எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.

அன்புடன்

உங்கள் அசலம
Achalam.com

கடிதம் - 8 கடிதம் - 10

             



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  




Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button