மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
| தத்துவங்கள் பார்வமணி |
உள்ளே இணையப் பாட்டிஆன்மீகம் தெய்வீகம் லௌகீகம் கலைகள் கல்வி பொது அறிவு நிர்வாகம் Net Granny Philosophy Religion Entertainment Arts Education Knowledge Management வெளியேதமிழிலக்கியம்தமிழிதழ்கள் தமிழ்மணம் நிலாச்சாரல் சுரதா.காம் தேன்கூடு தினமலர் தினகரன் Answers The Hindu Dictionary Geography Downloads Knowledge Special Links Encyclopedia Mazalais Blog E-mail Services |
1. இல்லாததற்கு இருப்பது என்பது இல்லை. மேலும் உண்மையாக இருப்பதற்கு இல்லாமை என்பதும் இல்லை. இந்த இரண்டின் தத்துவம் தத்துவ ஞானிகளால் கண்டறியப்பட்டது. “அஸ்த:” என்றால் எது? அதற்கு இருப்பு இல்லை என்றால் என்ன பொருள்? மாறிக்கொண்டே இருக்கக்கூடிடய உடல், புலன்கள், புலன் நுகர் பொருட்கள், மற்றும் ஜடப்பொருட்கள் அனைத்தும் “அஸ்த:” எனப்படும். அதற்கு “இருப்பு” இல்லை என்றால், அவை எப்பொழுது இருப்பதாகத் தோன்றுகின்ற்னவோ, அதற்கு முன்புமிருந்ததில்லை, பின்பும் இருக்கப்போவதில்லை; இருப்பதாகத் தோன்றும் போதுகூட அவை உண்மையில் இல்லை. 2. “ஸத:” என்பது என்ன? அதற்கு இல்லாமை என்பதும் இல்லை என்று கூறுவதின் கருத்து என்ன? “ஸத:” என்ற சொல் பரமாத்வ தத்துவத்தைக் குறிக்கிறது. அது எங்கும் நிறைந்தது, நித்யமானது. அது இல்லாமல் போவதில்லை. எந்தக் காரணத்தினாலும் அது மாறுபடுவதோ, இல்லாமல் போவதோ கிடையாது. அது எப்பொழுதும் ஒரே சீரானது. துண்டு படாதது, விகாரப்படாதது. 3. இவ்விரண்டின் தத்துவங்களை ஞானிகள் கண்டுள்ளார்கள் என்றால் என்ன கருத்து? ‘இவ்விரண்டும்’ என்று “அஸத:”, “ஸத:” இரண்டையும் குறிப்பிடுகிறார். தத்துவம் அறிந்த ஞானிகள் இவற்றை ஆராய்ந்து தீர்மானத்திற்கு வந்துவிட்டர்கள். எது மாறிக்கொண்டே இருக்குமோ, எல்லாக் காலங்களிலும் இருப்பதில்லையோ அல்லது அழியுமோ அது “அஸ்த:”, அதாவது அஸத்தான வஸ்து இருப்பது என்பது முடியாத கார்யம். எந்த நிலையிலும் எக்காரணத்தாலும் எதற்கு மாறுபாடோ, அழிவோ கிடையாதோ, எது எப்பொழுதும் இருக்குமோ அது ஸத. ஸத்தான பொருள் அழிவதே இல்லை. இதுவே தத்துவமறிந்த ஞானிகள் ஆராய்ச்சியில் கண்டறிந்த உண்மை. 4. உடல், புலனகள், போகப் பொருட்கள், அனுபவிக்கும் இடம், மற்றும் எல்லா ஜடங்கள் அனைத்தும் சேதனனான் பரமாத்ம தத்துவத்தினால் வ்யாபிக்கப்பட்டிருக்கின்றன. பரமாத்வ தத்துவம் அழிவற்றது. முன் கேள்விற்கு “ஸத்:” என்பதற்கு என்ன இலக்கணம் கூறப்பட்டதோ, அதன்படி ஞானிகள் எதை “ஸத்:” என்று நிச்சியம் செய்தார்களோ, அந்தப் பரமாத்மாவே “அவிநாசி” (அழிவற்றவர்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். பார்வமணி |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |