Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children               Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
வாழும் முறைமை கடிதம் 3
அசலம்


ஓம்

 

அருள் வாக்கு

Date: 14/01/2007

கடிதம்

From

அசலம்

achalam38@gmail.com

 

 

அருமைச் செல்வங்களே,

 

வாழ்வின் வழிகாட்டிகள்:

நாம் இந்த உலகில் நலமுடன் வாழ தெய்வம், குரு. மாதா, பிதா என்ற நால்வர் காரணமாக அமைந்துள்ளார்கள். ஆகையால் முதலில் தினமும் அவர்களை வழிபடுவது உசிதமே. நம் ஸுகவாழ்வுக்கு தெய்வம், ஞானத்திற்கு குரு, போகத்திற்கு மாதா பிதா எனப் பறைசாற்றுகிறது நமது சாஸ்திரம். இவர்களை வணங்கினால் மட்டும் போதாது. அவர்கள் காட்டும் வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். வேதம் சொல்வதாவது:

ஸத்யம்வத தர்மம் சர -
மாத்ருதேவோ பவ - பித்ருதேவோ பவ
ஆசார்யதேவோ பவ - அதிதிதேவோ பவ

LISTEN or DOWNLOAD

ஸத்யமே சொல், (பொய் சொல்லாதே). மாதா, பிதா, குரு, அதிதிகள் இவர்களை தெய்வமாகக் கொண்டாடு. காரணம் நமக்கு, கண்ணுக்குத் தெரியும் தெய்வங்கள் இவர்கள். நமக்கு நல்லது நேர ஆசீர்வதிப்பவர்கள் இவர்கள். அவர்களை நாடினால், வணங்கினால் நமக்கு நல்வழி காண்பிப்பார்கள் எனப் பொருள்.

அத்துடன் நாம் நம் கர்மாக்களை சரிவரச் செய்யவேண்டும். குழந்தைகளாகிய, மாணவ மாணவிகளாகிய உங்களுடய தர்மம் (Duty) என்ன? ஸாத்வீக உணவருந்தி, உடலையும மனதையும் சுத்தமாக வைய்த்துக்கொண்டு ஞானத்தை வர்த்திப்பிக்க சிரமப்படவேண்டும். மேற்சொன்ன வேதவாக்குப்படி வாழ்க்கை லட்சியத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். உடலை ஏன் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்?

உடல் ஓர் ஆலயம்:

நம் உடல் ஓர் ஆலயம். எப்படி? அதனுள்தானே தெய்வம் நம் ஜீவாத்மா வடிவில் வஸிக்கிரார். தெய்வம் இருக்கும் இடம் ஆலயம் தானே? உடல் நலம் கெட்டால் மனம் ஓர் நிலையில் இராது. கவனம் முழுதும் உடலிலேயே இருக்கும். நம்முள் உள்ள தெய்வத்தில் சிந்தனை செல்லாது. உடல் அலங்காரம் புற உலகில் உங்களை மதிக்க ஓர் ஏற்பாடு. ஆனால், அதே சமயம் தெய்வம் வஸிக்கும் ஆலயமாதலால் அதை அப்பழுக்கின்றி வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொதுதான் நம் கவனம் உடலிலிருந்து உள்நோக்கிச் செல்லும். ஆகையால், காலையில், உடலை சுத்தம் செய்து, அலங்கரித்து, தெய்வத்தை வழிபடுவது வழக்கம். தெய்வத்தை எதற்காக வழிபடவேண்டும்? நமக்கு நல்லது கெட்டது அமைவது தெய்வத்தின் அருளால்தான். இன்று பொழுது நன்றாகக் கழிய வேண்டுமே என்று நாம் தெய்வத்தை நாடுகிறோம். நாம் நல்வழியில் செல்லக் கடவுள் அருள் தேவை. கடவுள் ஆலயத்திலல்லவோ இருக்கிறார்? நமக்குள் எங்கிருந்து வந்தார்? என நீங்கள் வினவலாம். அங்கிருப்பது எல்லோருக்கும் பொதுவான விக்ரஹம். நம்முள் இருப்பது நம்முடய மூலாதாரமான வடிவம். நமக்குத் தனியாக, நம் குணத்திற்கு ஏற்ப வழி அமைத்துத் தரும் சக்தி.

நம் சுபாவம் (Character):

இங்கேயும் பாருங்கள், “நம் குணத்திர்க்கு ஏற்ப” என்றுள்ளது. ஆகையால் நம் கர்மா நம் குணத்திற்குட்பட்டது என விளங்குகிறது. இதனால் என்ன தெரிகிறது? நம் குணம் நன்றாயிருந்தால் நல்ல காரியம் செய்வோம், நல்ல பலன் கிடைக்கும் என்றல்லவா? குணத்தின் தரம் நம் சுபாவத்தை (Character) உருவாக்குகிறது. குணத்தை எப்படி அமைத்துக்கொள்ள முடியும்?

1 தகுந்த உணவுப்பொருட்களை உகந்த அளவு உட்கொள்தல்
2 நல்ல விசாரங்களை நம்முள் வளர்த்துக்கொள்வது
3 சுயநல ஆசைகளைத் தவிர்த்து எல்லோருக்கும் உதவியாக உள்ள நல்ல காரியங்களைச் செய்வது

முதலில் சொன்னதைப்பற்றி விரிவாக, “வாழ்வின் லட்சியம்” என்ற தொடரில் பார்க்கவும். இரண்டாவது நம் அறிவை வளர்த்துக்கொள்ள நம் சாஸ்திரங்களைப் படிப்பது, குருவும் பெரியோர்களும் காட்டும் வழி நடப்பது என அமைத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவதாகக் கூறியுள்ளது பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொன்ன முறைகளைக் கையாண்டு, அதன்படி செயல் புரிவது. இதற்கு நம் பள்ளிக்கூடப் புத்தகங்களைப் படிப்பதோடு, தினம் இறை வழிபாடு முறையைக் கையாள்வது அவசியம். பிறகு கீதை, புராணம் கேட்டல் என வழிபட வேண்டும். நம் வீட்டில் தாத்தா, பாட்டி நமக்குச் சொல்லும் புராணக் கதைகளைக் கேட்பது, ஆலயங்களில் பௌராணிகர் சொல்லும் கதா ப்ரவசனத்தைக் கேட்பது, அதன் உட்கருத்தைப் (Morals) புரிந்துகொண்டு, நம் வாழ்க்கை லட்சியத்தைச் சரிவர அமைத்துக்கொண்டு, நம் வாழ்க்கைத் தரத்தை ஒழுங்குபடுத்துவது என ஓர் நியதியை நமக்கு நாமே வகுத்துக்கொள்ள வேண்டும். இப்படி நம் சுபாவ வடிவைத் திருத்திக்கொள்வோமானால் நம் செயல் ஸாத்வீகமாகவே அமையும். இதற்கு Character Building என்று கூறுவார்கள். ஆக, முதலில் Character Building மிகவும் முக்கியம் எனப் பார்த்தோம். இத்துடன் உங்கள் அறிவும் வளர வேண்டும். ஆதற்கு உங்கள் பள்ளிக்கூடப் பாடங்களைச் சரிவரக் கற்றுணர்ந்து, தேர்வுகளில் முதலில் வர வேண்டும் என்ற நோக்கத்தை வளர்த்துக்கொண்டு, மாணவ தர்மத்தைக் கையாள வேண்டும்.. புற உலக வித்தை மிக அவசியம். ஏன்? உத்தியோகம் பார்க்க வேண்டுமானால் முதலில் நல்ல Degree எடுத்து, மேல் படிப்புப் படித்து, நல்ல மார்க்குகள் வாங்க வேண்டும். அதற்கு மனதை ஒரு நிலையில் கொணர வேண்டும். அதற்காகத்தான், மேல் சொன்ன இறை வணக்கம், பெரியோர்கள் சொற்படி நடப்பது, நமது வேத சாஸ்திரங்களை உணர்வது, மற்றவர்களுக்கு நல்லது செய்யும் வண்ணம் செயல் புரிவது முதலிய Character Building கருவிகளைப் பயன்படுத்துவது என்று நம் பெரியோர்கள் அமைத்துத் தந்துள்ளார்கள்.

இப்படி தெய்வ வழிபாடு, சத்தான மித உணவு உட்கொள்தல், புராணக் கதைகள் கேட்டு அதன் Moral படி நம் Character ஐ அமைத்துக்கொள்வது, ஆலய வழிபாடு, தெய்வத்திடம் பக்தி, நம் சாஸ்திரங்களில் நம்பிக்கை, பெரியோர்களை மதிப்பது, சுயநலமின்றி, மற்றவர்களுக்குத் தீங்கு இழைக்காதபடிக் காரியங்களைச் செய்வது போன்ற வழிகளைப் பின்பற்றுவது என நம் வாழ்க்கை முறையை அமைய்த்துக் கொள்ள வேண்டும்.

எல்லோரும் நலமுடன் வாழ்வீர்களாக.

அன்புடன்
உங்கள் அசலம்

கடிதம் - 2 கடிதம் - 4

 

Websites of Guru Achalam:

www.geocities.com/v_achalam

இங்கிருந்து அவரது மற்ற தளங்களாகிய “ஆத்மீகம்” “பஜனசம்ப்ரதாயம்” “வெப்வ்யூ” “ஸாப்ட்வெயர்ஸ்” என்ற தளங்களூக்கு நேர் தொடர்பு உள்ளது.

Email Addresses of Guru Achalam:

achalam38@aim.com
achalam38@netscape.net
achalam38@gmail.com

           


Mail To Editor: editor@mazhalaigal.com     Give your Feedback: Feedback     Take a Quiz
Service to mankind is service to God
Vinayaka - Artwork Caricature of Rajnikanth Caricature of Jayalalitha Caricature of MGR Caricature of Karunanidhi Caricature of Thiruvalluar, Tamil poet Caricature of Swami Vivekananda
Submit your articles Free Software Every Day Submit Artwork Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button