மழலைகள்.காம்
Bilingual Monthly. Issue 13 - June '07

 

Today's Children are future Leaders

Bring out the child in you



Create Tamil contents with Download Azhagi Tamil software - Free Tamil Computing at its Easiest Best - Create Tamil contents in ALL Windows applications

மழலைகள்.காம்

குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், புகைப்படங்கள், கதைகள், கவிதைகள், பாடல்கள், இசை, பொது அறிவு, க்விஸ், புதிர்கள், போட்டிகள், கணினியில் தமிழ் படைக்கும் வழிகாட்டி, கட்டுரைகள், ஆன்மீகம்

Dear friends,

This is the second newsletter of mazhalaigal.com which has reached its 13th issue and is becoming more and more popular day by day. Glimpses of the articles, poems, stories, artwork and various other contents of the site have been described briefly below with relevant links to the respective pages.

We seek your continued support to promote this venture targeted at improving the talents of Children in all walks of life while providing fruitful entertainment not only to children but also to elders.

Thank you,

A.K. Rajagopalan
Editor

காஞ்சிக் குயில் - ஆகிரா

மழலைப்பருவ முதலே தமிழிசையில் மிகுந்த ஆர்வம் கொண்டு சிறகடித்துப் பறக்கும் சுபாஷிணி எனும் பெயர்கொண்ட இவ்விசைக்குயில் பல மேடைகளைக் கண்டுள்ளது. அத்துடன் இசை உலகின் பல பிரபலங்களுடன் கலந்து பழகி அவர்களது பாராட்டையும் பெற்றுள்ளது.

பிரதாபன் கதை - வெற்றிவளவன்

"பிரதி பலன் எதிர்பார்த்து நான் இதைச் செய்யவில்லை. ஆபத்தில் உதவுவது புண்ணிய காரியம். அந்தப் புண்ணிய பலன் எனக்கு சொர்க்கத்தைத் தரும்" - "இறந்த பிறகு கிடைக்கும் சொர்க்கம் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் உங்களுக்குக் கடவுள் அருள் தருவார்"

மின் அஞ்சல் சின்னம் @ பிறந்த கதை - பார்வமணி

அதிகமான பாஷைகளில், இந்த சின்னம், பலதரப்பட்ட உருவகம், பொதுப்படையாக, பிராணிகளுக்கு ஒப்பிட்ப்படுகிறது. ஜெர்மானியர், ஃபின்ஸ், ஹங்கேரியன், போல்ஸ், தெற்கு ஆப்பிரிக்கர்கள், இந்தச் சின்னத்தைக் குரங்க்கின் வாலாகப் பார்க்கிறர்கள். மற்றும் சிலர் நத்தைக்கு ஒப்பிடுகிறார்கள். இப்படியாகப் பலவிதம்.

அண்ணாமலையான் திருப்புகழ் பாகம் 1 - செபரா

இறைவன் கருணாமூர்த்தி என்பதால், நான் வேண்டாத பொழுதும், எனக்கென்ன வேண்டுமோ அதனைத் தானாகத் தருவான் என்பதால், அவன் புகழைப் பாடுகிறேன். நீரின் இயல்பு, பள்ளத்தை நோக்கிப் பாய்வதுதானே

கணினி பிறந்த கதைகேளு! - என்.வி. சுப்பராமன்

எண்ணும் எழுத்தும் கண்ணெனவே அன்றே சொன்னான் வள்ளுவனும் விண்ணையும் காணப் பயன்படுமே கணினி என்னும் கருவியது!

விநாயகர் உருவ ரஹஸ்யம் - கீதா சாம்பசிவம்

யானை முகம், ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், ஆறு எழுத்துக்கள் உள்ளவர். விநாயகர் என்பது ஆறு எழுத்து இல்லையா? இவரை வழிபடுவோர் ஏழு பிறவிகளில் இருந்தும் விடுபட்டு, எட்டுத் திசைகளும் புகழ, ஒன்பது மணிகளும் பெற்று சம்"பத்து"க்களுடன் வாழ்வார்கள்.

Flat Stanley from USA interviews mazalais kids on Kanchee

There are a large number of temples with plenty of sculptures and artwork in and around Kancheepuram. There are 108 temples exclusively for Lord Shiva out of these.

தாமஸ் ஆல்வா எடிசன் - பார்வமணி

இவர் மிக சிறந்த விஞ்ஞானி. இவருடைய கண்டுப்பிடுப்புகள் ஆயிரத்திற்கும் மேல். இவர், ஏழு குழைந்தைகளுள் கடைக்குட்டி.

விஞ்ஞான எழுத்தாளர் - akr

கணினி வந்த பிறகு ப்ரௌசிங் செய்து, பல விஷயங்களை அறிந்து, நான் அறிந்ததை மற்றவர்களுடன் மின் அஞ்சல் மூலமும், ஏனைய இணையதளக் குழுமங்கள் மூலமும் பகிர்ந்து கொள்வதுதான் இப்பொழுதைய பொழுதுபோக்கு.

ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பொன் மொழிகள்

கொடுத்து மகிழ் - Give and Rejoice, கோபம் கூடாது - Avoid Anger, சச்சரவு தவிர் - Avoid quarell, சத்சங்கம் தேடு - Seek Holy company, சிவனே சங்கரர் - Sankara is Siva only

புதையல் பெட்டகம் - அத்தியாயம் 5 - எஸ்.வி.என்

பிரளய காலத்தில் மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்ததாக இந்துப் புராணங்கள் சொல்கின்றன. நோவா என்னும் மனிதன் கடவுளின் ஆணைப் படி ஒரு பெரிய கப்பலைக் கட்டி அதில் எல்லா வித உயிரினங்களின் ஒவ்வொரு ஜோடியை ஏற்றிச் சென்றதாகப் பழைய ஏற்பாட்டிலும் யூத மதத்திலும் சொலப்படுகிறது. இன்று இல்லாமலே அழிந்து போன கிரேக்க மதம் தன்னுடைய கதைகளில் பிரளய காலத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

Funny Duck - artwork

என்னைப் பாத்தியா என்தலையைப் பாத்தியா!

Little Angela - Artwork

Oh my little child Anjela, what ails thee?
Wipe off your tears and bring back thy cheers !

சிவபக்தர் ஹரதத்தார் - இணையப் பாட்டி

ஸ்ரீ மகாவிஷ்ணு கஞ்சனூரில் தனது 15 அவதாரங்களுள் ஒன்றான ஸுதர்சனாவதாரமாக வாஸுதேவருக்குப் புத்ரராக அவதரிக்க, அவருக்கு சுதர்சனர் என்ற பெயர் வைத்தனர். ஆனால் ஹரதத்தர் என்று கூப்பிட்டனர்.

அன்னைக்கு வந்தனம் - தாத்தா சீனு

தெய்வத்திரு ஆதி சங்கரரின் மாத்ரு பஞ்சகம் எனது ஞாபகத்திற்கு வந்ததால், அந்தக் கண்களில் நீர் பெருக வைக்கும் சுலோகங்களை பரமாசாரியார்களின் (காஞ்சி மாமுனிவர்) விளக்கங்களுடன் சமர்ப்பிக்கின்றேன்.

Umbrella Friends - Artwork

இருவரும் ஒரு குடையில் ! அனைவரும் ஒரு நிழலில் !!

களிமண் - ஆகிரா

கோவில் கம்பீரமாக வானை அளாவி நின்றது. கோவிலின் கோபுரம் கிராமத்தின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியும் வண்ணம் போதிய உயரத்தில் அமைக்கப்பட்டிருந்ததுடன் வண்ணமயமான சுதை வேலைப்பாட்டு முறையில் வடிக்கப்பட்ட சிற்பங்களுடன் கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது. கரகாட்டம், கச்சேரி, வாண வேடிக்கைகள் என்று ஊரே அமளிதுமளிப்பட்டது.

பசுமரத்தாணி - சீனு தாத்தா

பத்து வயதிலிருந்து பதினாறு இன்னம் சொல்லப் போனால் பதினெட்டு வயதைத் தாண்டும் வரை மிகப் பல துராசைகள், தீய பழக்க வழக்கங்கள் உன்னை மயக்கி, கவர்ச்சி செய்யத் தொடங்கி, விரைவில் உன்னை அவைகளில் ஈடுபட வைக்கும் வாய்ப்புக்கள் இருந்து கொண்டே இருக்கும். வளரும் சிறுவர் சிறுமியர்களின் இந்த ஆறெட்டு வருட கால கட்டத்தை ஆங்கிலத்தில் 'Dangerous Years' அதாவது 'ஆபத்தான, இடருடைய அல்லது பாதுகாப்பற்ற வருடங்கள்' எனக்கூறுவார்கள்.

கண்ணே கலைமானே - இணையப் பாட்டி

நம் பெரியவர்கள் நமக்கு எப்போதும் நன்மைக்காகவே சில அறிவுரைகள் வழங்குவார்கள் அதுவும் தாய் என்றால் கேட்கவே வேண்டாம், எப்போதும் குழந்தைகளின் நலத்தையே சிந்திப்பாள். இது பற்றி ஒரு கலைமானின் கதை சொல்கிறேன்.

செவிலி நைட்டிங்கேல் - சீனு தாத்தா

என்றுமே உலகம் மறக்காத ஃப்ளாரென்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினம் மே 12. அகில உலகத்திலும் அந்த தினத்தை (Nurse's Day) "செவிலியர்" தினமாகக் கொண்டாடுகிறார்கள்.

Magician - Artist: M. Deepshi

ஜீ.. பூம்.. பா.. ! மயக்கிடுவேன் என் மாய வித்தையில்

மே தினத்தின் வரலாறு - பார்வமணி

ஆதிகால Celts and Saxons நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள். Saxons ஏப்ரல் 30 சாயந்திரம் விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்படுவது.

US presidents - akr

Test your general knowledge - Take a quiz

ஆலயம் என்பது வீடானால்? - முரளி

இந்த நான்கு பணியாளர்களும் தினமும் காலையில் 6 மணிக்கு வேலையைத் துவங்கி இரவு 9 அல்லது 10 மணி வரை வேலை செய்தார்கள். அவர்கள் வார இறுதி விடுப்பேதும் எடுக்கவில்லை. பணியை முடித்துவிட்டு வீடு திரும்பவே விரும்பினர்.