மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
இணையப் பாட்டி
|
|
|
அன்புக் குழந்தைகளே,
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் இல்லையா? ஆஹா! கையில் வண்ண வண்ண பலூன்களுடன், சின்ன மூவர்ணக் கொடியுடன், மகிழ்ச்சியுடன் வலம் வருவதை நான் பார்க்கிறேன். தவிர, பட்டங்கள் ஆகாயத்திலும் பல பறக்க, அதை ஒருவர்க்கொருவர் வெட்டிவிட்டு உத்சாகத்துடன் மகிழ்வதும் கற்பனை செய்கிறேன்.
இந்த சுதந்திர தினத்தன்று, "ஹையா ஒரு நாள் பள்ளி லீவு, கொட்டம் அடிக்கலாம் என்று இல்லாமல் சுதந்திரம் வாங்கித்தந்த தலைவர்கள் பற்றியும் தேசத் தொண்டர்கள் பற்றியும் படிக்கலாம், அல்லது பெற்றோரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம், ஒரு நல்ல விதமாகப் பொழுதுபோக்க வேண்டும். பெற்றோர்களுக்கு முடிந்த உதவியைச் செய்யலாமே, கப்பல் ஓட்டிய தமிழன், கட்டபொம்மன் போன்ற படங்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து பார்க்கலாம், அவரிடம் சந்தேகங்களையும் கேட்கலாம். படங்கள் வரையும் ஆர்வம் இருந்தால் மூவர்ணக் கொடி வரைந்து நண்பர்களுக்குக் கொடுக்கலாம், பட்டம் வீட்டிலேயே த்யார் செய்யலாம். என்ன குழந்தைகளே ரெடியா? ஒரு தமிழ் நாட்டு இளைஞர் வீரத்துடன் தேசப்பற்று மிகுந்து சுதந்திரப் போராட்டத்தில் தலைமை வகித்து நாட்டிற்காக உயிரையும் கொடுத்தார். அவரைப் பார்ப்போம். கொடி காத்த குமரன்திருப்பூரில் உதித்த சூரியனேஅறப்போராட்டத் தலைவனே, தேசத்திற்குக் கொடுத்தாய் உயிரோட்டம் கலந்து கொண்டாய் மரியல் போராட்டம் தேச பந்து இளைஞர் மன்றம் தலைவன் நீ நாட்டுப் பற்று, விடுதலை வேட்கை கொண்டாய் நீ வறுமையிலும் செழுமை கண்டாய் நீ போராட்டத்தின் தலைமை ஏற்றாய் நீ தடியடிப்பட்டு விழுந்தாய் நீ மண்டை உடைந்து இரத்த வெள்ளமானாய் நீ ஆனாலும் இந்தியக் கொடியை விடாது பிடித்தாய் நீ கொடிக்காத்த குமரன் ஆனாய் நீ எங்கள் மனதில் என்றும் அகலாமல் நீ!
அன்பு குழந்தைகளே நாட்டிற்க்காக நீங்களும் ஏதாவது சாதிக்க என் ஆசிகள் அன்புடன் அம்ம்ம்மா |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |