மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
இணையப் பாட்டி
|
|
|
அன்புக் குழந்தைகளே,
கர்நாடக இசையின் முமூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜரைப் பற்றி உங்கள் யாவருக்கும் தெரிந்திருக்கும். அவர் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் ஸ்ரீ ராம நாமம்தான். எந்நேரமும் அவர் சிந்தனையிலேயே இருந்து பல பாடல்கள் தெலுங்கில் இயற்றி, பாடியும் இருக்கிறார். ஒரு சமயம் அவர் திருப்பதி பாலாஜியைத் தரிசிக்க எண்ணினார். அந்தக்காலத்தில் பஸ் போன்ற வசதிகள் இல்லை. ஸ்ரீ தியாகபிரும்மம் பல்லக்கில் கிளம்பினார். போகும் வழியெல்லாம் ஒரே காடுதான், குரங்குகளும் அதிகம் உண்டு. பல்லக்கை அவரது சீடர்கள் தூக்கிச் சென்றனர். காலை திருப்பதியை அடைந்து, பெருமாள் தரிசனத்திற்காக வெகு நேரம் நின்றனர். பெருமாளை ஒரு திரையால் மூடி வைத்திருந்தனர். ஸ்ரீ தியாகராஜருக்கு அந்தக் கோவிந்தாவைப் பார்க்கும் ஆவல், பொறுமையுடன் இருக்க முடியவில்லை,"அப்பா, கோவிந்தா, எப்போது உன் பங்கஜ நயனங்களைப் பார்ப்பேன், எப்போது உன் கருணை வடிவத்தைப் பார்ப்பேன்" என்று மனம் கதறி ஒரு பாடல் தெலுங்கில் பாட ஆரம்பித்தார், "தெரதீயக ராதா" என்ற பாடல், "திரை கீழே விழாதா? உன் தரிசனம் கிடைக்காதா?" என்ற பொருள் கொண்ட பாடல் அது. கௌளிபந்து ராகத்தில் சோகமாக், மிகவும் பணிவாக, கடவுளிடம் கேட்டுக்கொள்ளும் பாடல் இது. என்ன ஆச்சர்யம்! திரை அறுந்து கீழே விழுந்தது, கோவிந்தா மலர்ந்த முகத்துடன் தரிசனம் தந்தார், பின் என்ன? ஸ்ரீ தியாகராஜரின் மகிழ்ச்சிக்கு கேட்கவும் வேண்டுமா? குழந்தைகளே, அன்பு உள்ளங்களுக்கு கடவுள் எளிதாக வசப்படுவார். ராம் நாமம் ஜபிப்போம். அன்புடன் அம்ம்ம்மா
தியாகராஜரின் பாடல்கள் பலவற்றைக் கேட்டு மகிழ ->
பாடல்களைக் கேட்க ரியல் ஆடியோ மென்பொருள் பெற ->
|
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |