மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE |
இணையப் பாட்டி
|
அன்புக் குழந்தைகளே,
உங்களில் அனேகருக்கு நல்லபடியாகப் பரீட்சை முடிவடைந்திருக்கும். இனிமேல் ஜாலியாகப் பொழுதைப் போக்குவீர்கள். சிலர் இரண்டு சக்கர வண்டி ஓட்டப் பழகிக்கொள்வார்கள், சிலர் அதை மிகவும் வேகமாக ஓட்டுவதில் ஆனந்தம் அடைவார்கள், மற்றும் சிலர் தங்கள் வீட்டில் இருக்கும் பைக்கில் ஏறி அதை ஓட்ட முயற்சி செய்வார்கள், அவர்கள் வயதோ அதை ஓட்டுவதற்கு ஏற்றதாக இருக்காது. இதனால் எதிர்ப்பாராத விதமாக விபத்து ஏற்படுகிறது. இரண்டாவதாக, சில சிறுவர்கள் வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாட ஆரம்பிப்பார்கள். உத்சாகத்தில் ரன் எடுக்க ஆசை, ஆகையால் மட்டையைத் தூக்கி அடிக்க, எதிர் வீட்டுக் கண்ணாடி சன்னல் உடைய, பின் என்ன? ஒரே அமர்க்களம் தான், சிறுவர் சண்டை பெரியவர்கள் சண்டையாகி, அதனால் கோபம், மன வருத்தம் எல்லாம் உண்டாகி விடுகிறது. ஆகையால் பெரிய மைதானம் பொன்ற இடத்தில் தான் இது போன்று விளையாட வேண்டும். வெயில் கடுமையில் வெளியில் சுற்றாமல் வீட்டின் உள்ளேயே சமயத்தை விரயம் செய்யாமல் உபயோகிக்க வேண்டும். ஒரு வீட்டில் ஒரு விபத்தில் மாட்டிய கார் வீணாகத் தூசி படிந்து நின்றுகொண்டிருந்தது. அதை மிக்வும் துறுதுறுப்பான ராமு என்ன செய்தான்? கீழே கவிதை சொல்கிறது. தகர டப்பா கார்
எங்க வீட்டு மாருதி கார் ஒன்று,
விபத்தில் வேகமாய் மோதி நின்று, முகமும் ஒரே சப்பையாகி பரிதாபமான தோற்றமாகி, வீட்டின் முன் புறம் நின்றது, தூசி படிந்து அழுதது.
எங்கள் விட்டு சுட்டிப் பிள்ளை,
பெட்ரோல் இல்லை, செலவும் இல்லை
விழுந்தது அழைப்பு பலர் காதில்,
ராமு குரல் மீண்டும் ஒலிக்க, அன்புடன் அம்மம்மா விசாலம் |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | இணையப் பாட்டி பக்கம் | Happy Birthday |