வீர இளைஞன்
இணையப் பாட்டி
அன்புக் குழந்தைகளே,
குதிராம் போஸ் என்ற வீரச் சிறுவன் நம் நாட்டிற்கென்று, நம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிரையும் கொடுத்தான். அவன் பெங்கால் மாகாணத்தைச் சேர்ந்தவன், மிட்னாபுர் என்ற கிராமத்தில் பிறந்தான். சின்ன வயதிலிருந்தே கீதையைப் படித்து அதன்படி நடக்க முயலுவான், அதன் கொள்கைகளை விரும்பினான், ஆங்கிலேயரை நம் நாட்டில் அறவே வெறுத்தான் ஆங்கிலேய ஆட்சியை முறியடிக்கத் தானும் ஏதவது வழியில் உதவ வேண்டும் என்ற ஆசை அவனைப் பற்றிக் கொண்டது, அவனுக்கு வயது அப்போது பதினாறுதான். ஒரு இயக்கம் ஜுகந்தர் என்ற பெயரில் நடந்து வந்தது. அதில் இவனும் சேர்ந்த்துக்கொண்டான். ஆங்கிலேய ஆட்சியை மறைமுகமாக எதிர்த்தான், ஆங்கிலேயரின் போலீஸ் ஸ்டேஷன், மற்ற முக்கிய இடங்களில் ஒருவருக்கும் சந்தேகம் வராதபடி குண்டு வைப்பதில் அதி சமர்த்தன்.
தன் வேஷத்தை மாற்றிக்கொண்டு காரியத்தைக் கச்சிதமாக முடித்து விடுவான். மூன்று வருடங்கள் இந்த இயக்கத்தில் இருந்தான். ஒரு சமயம் அவனுடைய தலைவர் அவனுக்கு இது போல ஒரு காரியம் ஒப்புவித்தார். அது என்னவென்றால் ஒரு பெரிய ஆங்கிலேய அதிகாரியையும் அவருடன் இந்தியர்களைக் கொடுமைப் படுத்திய கல்கத்தாவின் மேஜிஸ்ட்ரேட் ஒருவரையும் அவர் கோச்சு வண்டியில் வரும் போது பாம் எறிந்து அழிக்க வேண்டும். குதிராம் மிகவும் மகிழ்ச்சியுடன் நாட்டின் நன்மைக்காக அதைச் செய்ய விரும்பினான். ஒரு இடத்தில் மாறுவேஷத்துடன் நின்று இருந்தான். அப்போது கோச்சு வண்டி வர, டமால் என்று பாம் வெடிக்க, கோச்சும் வெடித்தது ஆனால் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று ஆனது.
அந்தக் கோச்சு வண்டியில் மாஜிஸ்ட்ரேட்டுக்கு பதில் அவரது வேறொரு நண்பரும் அவர் மனைவியும் இருந்தனர். அவர்கள் குண்டினால் எரிந்து போனார்கள். போஸ் இந்தக் குற்றத்திற்காகப் பிடிப்பட்டான். அப்போது அவனுக்கு 19 வயதுதான். அச்சம் என்பது அறவே இல்லை. அவனுக்குத் தூக்குத் தண்டனைத் தரப்பட்டது. தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்றனர், சிரித்த முகத்துடன் சென்றான், "ஜெய் ஹிந்த்" என்ற வார்த்தை அவனிட்மிருந்து கடைசியாக வந்தது/
அவன் உயிர் பிரிந்தது.
Reference: குதிராம்
நினைவில் வந்த சில முக்கியமான சம்பவங்கள்:
1947 சுதந்திரம் அடைந்தோம். சாச்சா நேஹ்ருஜி பிரதம மந்திரி ஆனார்.
1948 மஹாதமா காந்திஜி கோட்ஸேயால் சுடப்பட்டார் ஜனவரி 30
1949 காஷ்மீரில் போர் நிறுத்தம் {ceasefire } ஜனவரி1
1950 இந்தியா குடியரசு நாடு ஆனது ஜனவர் 26
19 51வினோபாவின் பூதான யக்ஞம் ஏப்ரல்14
1952 முதல் தேர்தல்
1953 புது ஆந்திர நாடு உருவானது அக்டோபர் 1
1956 மொழியின் பிரகாரம் நாடுகள் பிரிக்கப்பட்டன நவமபர் 1
1961 டாமன், டையூ, கோவா இந்தியாவுடன் டிசம்பர் 12
1962 சீனாவின் படையெடுப்பு அக்டோபர் 20
1964 பிரதமர் நேஹ்ருஜி காலமானார் மே 27
1965 ஹிந்தி தேசிய மொழியானது ஜன் 26
1965 இந்தியா பாக்கிஸ்தான் போர் ஆகஸ்ட் 5
1966 திரு லால் பஹுதூர் சாஸ்திரி,
பாகிஸ்தான் அயூப்கான் ஒப்பந்தம் தாஷ்கந்த் ஜன 10
பிரதம்ர் சாஸ்த்ரிஜியின் மரணம் ஜன 11
இந்திராஜி பிரதமர் ஜன் 19
1969 இந்திய தேசியக் காங்கிரசில் பிளவு
1971 மூன்றவது இந்திய பாகிஸ்தான் போர் டிசம்பர் 3
1974 முதல் அணுசக்தி பரிசோதனை பொகரான் மே 18
1975 ஆர்யபட்டா முதல் விண்வெளிக் கப்பல் ஏபரல் 19
சிக்கிம் ஒரு ஸ்டேட் மே 16
எமர்ஜென்சி ஜூன் 26
1977 பொதுத் தேர்தல் ஜன 23
மொரார்ஜி பிரதமர் மார்ச் 24
1980 காங்கிரஸ் ஐ இந்திரா பிரதமர் ஜன 7
சஞ்சய் காந்தி மரணம் {plane crash } ஜுன் 23
1981 ஜகத் நாரயன் கொலை பிந்த்ரென்வாலா கைதி செப்டம்பர் 9
1984 பஹுஜன் சமாஜ் பார்டி தோற்றம் ஏபரல் 13
ஆப்பிரேஷன் ப்ளூ ஸ்டார் ஜூன் 1
பிரதமர் இந்திராஜி சுட்டுக் கொல்லப்பட்டார் அக்டோபர் 31
போபால் விஷ வாயுவால் பலர் மரணம் டிசம்பர் 3
ராஜீவ காந்தி பிரதமர்
1985 ஏர் இந்தியா ப்ளேன் தீவிரவாதிகளால் நாசமானது ஜூன் 23
1986 ஆப்பிரேஷன் பிளாக் தண்டர் சிக் கோவில் தாக்கப்பட்ட்டது ஏபரல் 20
1988 பிருத்வீ ஏவுகணை பிப்ரவரி 25
ஜனதா தல் தொடக்கம் மார்ச் 17
வி.பி சிங் பிரதம மந்திரி நவம்பர்
1990 சந்திரசேகர் பிரதம் மந்திரி நவம்பர் 7
1991 ராஜீவ காந்தி படுகொலை மே 21
நரசிம்ம ராவ் பிரதம்ர் ஜுன் 21
1992 பாபரி மஸ்ஜித்தில் தாக்கல் டிசம்பர் 6
1993 13 குண்டுகள் மும்பயில் வெடிப்பு மார்ச் 12
சுமார் பத்தாயிரம் பேர்கள் பூகம்பத்தில் மரணம் மஹாராஷ்டரா செப்டம்பர் 30
1996 13 கட்சிகள் சேர்ந்த கூட்டணி தேவ்கௌடா பிரதமர் மே 28
1997 திரு கே.ஆர். நாரயணன் தலித குடியரசுத்தலைவர் ஜூலை 17
சூராவளி ஒரிஸ்ஸாவில் அக்டோபர் 19
இந்தியா ஏர்பஸ் ஏ 300 கடத்தப்பட்டது டிசம் 25
2000 35 சர்தார்ஜிகள் சூட்டுக் கொல்லப்பட்டனர் காஷ்மீர் மார்ச் 20
கொள்ளை ராணி பூலோந்தேவி தில்லியில் சுடப்பட்டாள் ஜூலை 25
2004 மனமோஹன் சிங் பிரதமர் மே 22
ஐ.என்.எஸ். தரங்கிணி உலகம் சுற்றி வெற்றி ஏப்ரல்25
கும்பகோணம் பள்ளியில் சிறு மாணவர்கள் கருகி மரணம் ஜூலை 16
வீரப்பன் பிடிப்பட்டு சுடப்பட்டான் அக்டோபர் 18
சுனாமி வருகை அழிவு பல டிசம்பர் 26
2005 ஸ்ரீநகர் முஸபராபாதிற்கு பஸ் சர்விஸ் ஏப்ரல் 7
அம்ருத்சரஸ் லாஹூர் பஸ் சர்விஸ் டிசம்பர் 11
2006 அமெரிக்கத் த்லைவர் ஜார்ஜ் புஷ் இந்தியா வருகை மார்ச் 2
சிறு குழந்தைகள் வேலைத் தடுப்புச் சட்டம் child labour} அக்டோபர் 10
2007 red fort சிவப்பு கோட்டை on world heritage list ஜூன் 28
முதல் பெண் குடியரசுத்தலைவி ஸ்ரீமதி பிரதிபா படேல் ஜூலை 25
ஆகஸ்டு 15 என்னும் போது என் மனம் உடனே சுதந்திர இந்தியாவுடன் மகரிஷி ஸ்ரீ அரவிந்தரிடம் செல்கிறது. கீதையின் நாயகன் ஸ்ரீ கிருஷ்ணரை அலிப்பூர் சிறையில் கண்டு களித்தார் அவர். ஆகஸ்டு 15ல் அவர் அவதரித்த தினம் வருகிறது. அவரின் அருளைப் பெறுவோம், அவர் அருளைப் பற்றிக் கூறியது:
அருள் என்பது ஒருவர் கண்டு பிடிப்பு அல்ல, ஆன்மீக அனுபவத்தின் வாஸ்துவமான ஒன்று அது, வைணவத்திலும் வருகிறது, சைவத்திலும் வருகிறது சாகிதத்திலும், வருகிறது கிருஸ்துவத்திலும் வருகிறது.
அது உபநிடத்தைப் போல் மிகத் தொன்மையானது தெய்வ அருள் ஒவ்வொரு நிமிடத்திலும் செயல்படவே காத்திருக்கிறது. ஆனால் ஒருவன் அறியாமை நியதியிலிருந்து வெளியே வந்து ஒளியின் நியதியில் வளரும் போது தான் அது வெளிப்படுகிறது. ஓர் அற்புதமான ஆட்கொள்ளுதல் போல் அது அடிக்கடி நிகழ்ந்த போதிலும் அது ஏதோ திட்டமில்லாமல் நிகழும் தான் தோன்றி இயக்கம் அல்ல, சாதகனின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இறுதி விடுதலைக்கு அவனை அழைத்துச் செல்லும் பேரொளி அது.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய
அன்புடன் அம்மம்மா
| toolbar powered by Conduit |
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















