வீரப் பெண்மணி
இணையப் பாட்டி
அன்பு குழந்தைகளே,
ஆகஸ்டு 15 நம் சுதந்திர தினம், அன்று ஒரு நாள் நமக்கு லீவு கிடைக்கிறது என்ற மகிழ்ச்சி உண்டாகிறதே தவிர அந்தச் சுதந்திரம் கிடைக்க எத்தனைப் பேர்கள் உயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர் என்று நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். தவிர தேச பக்தி உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். சுதந்திரம் வாங்கித்தர தன் உயிர், உடல், பொருள் என்று எல்லாம் நம் தேசத்திற்கு அர்ப்பணித்து விட்டவர் பலர். இதில் ஒரு பார்சீயப் பெண்மணி மிகவும் வீர தீரத்துடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்டார் .அவர் பெயர் மேடம் காமா. அவர் குஜராத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு பெரிய பணக்காரக் குடும்பத்தில் 24-9-1861ல் பிறந்தார்.
1907ல் நடந்த ஒரு சம்பவம், இந்திய சோஷலிசக் கூட்டம் ஜெர்மனியில் ஸ்டூவர்ட் என்ற இடத்தில் நட்ந்து கொண்டிருந்தது. திடிரென்று ஒரு பெண்மணி கையில் நம் நாட்டு தேசியக் கொடியுடன் வீரமாக நடந்து அந்த இடத்தில் இந்தியத் தேசியக் கொடியைப் பறக்க விட்டார். முதல் தடவையாக ஒரு பெண் கலர் புடவைக் கட்டி இந்தியக் கலாசாரத்துடன் கூட்டத்திற்கு ந்டுவே முன்னேறி, "பாருங்கள் எல்லோரும், இதுதான் இந்தியத் தேசியக் கொடி, நமது சுதந்திரக் கொடி, இது பல இளைஞர்களின் தியாகத்தாலும் அவர்கள் சிந்திய இரத்த்தாலும் இசையப் பட்டிருக்கிறது, இதை வணங்குங்கள், இந்தக் கொடிக்கு கை கொடுங்கள்" என்று வீரத்துடன் வெற்றி நடை நடந்து பெருமையாக அதை நாட்டினார்.
இந்தச் சம்பவம் இன்றும் பலர் நினைவுக்கு வரும். அவள் செயல் ஒரு பெரிய மகாராணி மிடுக்குடன் வந்து கொடியை ஏற்றி வீரத்துடன் மொழிந்தது போல் இருந்தது. அநதக் கொடி இப்போது இருக்கும் தேசியக் கொடியைப் போல் இல்லை, கொஞ்சம் மாறுபட்டிருந்தது. மேலே பச்சை வர்ணம், கீழே சிவப்பு வர்ணம் நடுவே மஞ்சள் வர்ணம் இருந்தன. சிவப்புக் வலிமைக்கும், மஞ்சள் வெற்றிக்கும், பச்சை முன்னேற்றத்திற்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலே எட்டுத் தாமரைகள் இருந்தன அவை எட்டு பிராந்தியங்களைக் குறித்தன. நடுவில் தேவ நாகரி எழுத்தில் வந்தே மாதரம் என்று எழுதப்பட்டிருந்தது. தேசததாய்க்குத் தலை வண்ங்குகிறோம் என்ற பொருள். உள்ளே சூரியனும் சந்திரனும் வரையப்பட்டிருந்தன, அது ஹிந்து முஸ்லிம் நம்பிக்கையைக் குறித்தது. இந்தக் கொடி திரு சவார்கர் என்பவரால் வடிவாக்கப்பட்டது இதற்கு பல சுதந்திர வீரர்களும் உதவினர்.
மேடம் காமா பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறந்தும் மிக எளிமையை நாடினார் அவர் திரு ருஸ்டம் காமா என்ற பெரிய சீமானை மணந்து கொண்டார் அவ்வளவு பெரிய பணக்காரக் குடும்பத்தில் இருந்தும் நிம்மதி இல்லாமல் தேச சேவைச் செய்ய முனைந்தார் அந்த நேரத்தில் பிளேக் என்ற கொடிய நோய் பல இடங்களில் பாதித்தது. இவர் அவர்களுக்கு உதவ முன்வந்து பின் தானும் மிகவும் உடல் நிலை மோசமாகி படுத்து விட்டார். பின் சற்று தேறியவுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுப்பட்டு தேசப்பற்று மிக்க பல புத்தகங்கள் வெளியிட்டார். தன்னிடமிருந்த பணம் எல்லாம் கொடுத்து உதவினார். ஆங்கிலேயருக்கு இவரால் மிகுந்த தலைவலி உண்டாயிற்று. இவர் ஜெர்மனி போய் திரும்பி வருவதற்குள் ஆங்கிலேயர் அவரைக் கொல்ல முயற்சித்ததால் தப்பி ஓடி பிரான்ஸ் வந்தார். அங்கிருந்தே இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுக்கப் பாடு பட்டார். பல சுதந்திர வீரர்களுடன் சமபந்தம் வைத்துக் கொண்டு உதவினார். பின் இந்தியாவிற்கு வர முயன்றும் அனுமதி கிடைக்காததினால் அங்கேயே தன் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டி இருந்தது. வயது முதிர்ந்த பின் பாரதம் திரும்பினார். ஆனால் அதிக நாட்கள் இருக்க முடியவில்லை. 13 -8 1936ல் காலமானார்.
அவர் வீர தீரத்துடன் நாட்டிய கொடியைத் திரு இந்திலால் யாக்னிக் என்பவர் குஜரரத்திற்கு எடுத்து வந்தார். இப்போது அது பூனாவில் மராத்தா புத்தகாலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. அந்த வீரப் பெண்மணிக்குத் தலை வணங்குவோம்.
அன்புடன் அம்மம்மா
இணையப் பாட்டியின் பிற படைப்புகள்
| toolbar powered by Conduit |





Your Feedback









