மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
| எங்கள் ஆசிரியரே! கே.ஆர். விஜயா |
உள்ளே இணையப் பாட்டிஆன்மீகம் தெய்வீகம் லௌகீகம் கலைகள் கல்வி பொது அறிவு நிர்வாகம் Net Granny Philosophy Religion Entertainment Arts Education Knowledge Management வெளியேதமிழிலக்கியம்தமிழிதழ்கள் தமிழ்மணம் நிலாச்சாரல் சுரதா.காம் தேன்கூடு தினமலர் தினகரன் Answers The Hindu Dictionary Geography Downloads Knowledge Special Links Encyclopedia Mazalais Blog E-mail Services |
கண்ணீர் மடல்குமரியில் பிறந்து காஞ்சியில்மறைந்த மாசில்லா மாணிக்கமே எங்கள் இதயத்தில் என்றும் நீங்கா இடம் பெற்ற இசையாரியரே! இறைவனின் பாதத்தில் இரண்டரக் கலந்த இனிய இசையே! இப்பூவுலகில் உம்மை மறக்க முடியுமா? - இனி இசைப்பணியை இங்கு ஆற்றிவிட்டு இறைப்பணி அங்கு ஆற்ற அமர உலகம் சென்றீரோ! காலையில் தோன்றும் சூரியன் மாலையில் மறைவது நியதி எங்கள் ஆசிரியரே நீங்கள் காலையில் எழுந்தீர்கள் நலமுடன் மாலையில் ஏன் மறைந்தீர்கள் இது இயற்கையின் சதியா? நீங்கள் எல்லாக் குழந்தைகளுக்கும் தாத்தா எங்களுக்கோ கவிஞர் ஆம்! குழந்தைக் கவிஞரல்லவோ தாங்கள் பகவதியையும் ஈசுவரனையும் பெயரில் கொண்ட நீங்கள் ஈசுவரனின் பாதத்தில் இரண்டறக் கலந்தீரோ? "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று எந்தப் பட்டத்தையும் தன் பெயரோடு சேர்த்துக்கொள்ளாத நீங்கள் 'அமரர்' என்ற பட்டத்தை மட்டும் ஏன் இன்று சூட்டிக்கொண்டீர்! ராகத்தையே மூச்சாக எண்ணி வாழ்ந்த நீங்கள் முஹாரியில் கலந்தீரோ? சாந்தமான சந்தனம் அணிந்த முகத்தை இனி எங்கு காண்பது? பலருக்கு வாழ்த்து மடல் எழுதிய உமக்கு இரங்கல் மடல் எழுத நேரிட்டதே இறைவா! அன்புமழை பொழியும் எங்கள் தமிழ் ஐயாவின் ஆன்மாவைச் சாந்தம் பெறச்செய்! உங்கள் பிரிவைத் தாங்க முடியாத உங்கள் மாணவி கே.ஆர். விஜயா |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |