மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
| நீல. பகவன் என் நண்பன் ஆகிரா |
உள்ளே இணையப் பாட்டிஆன்மீகம் தெய்வீகம் லௌகீகம் கலைகள் கல்வி பொது அறிவு நிர்வாகம் Net Granny Philosophy Religion Entertainment Arts Education Knowledge Management வெளியேதமிழிலக்கியம்தமிழிதழ்கள் தமிழ்மணம் நிலாச்சாரல் சுரதா.காம் தேன்கூடு தினமலர் தினகரன் Answers The Hindu Dictionary Geography Downloads Knowledge Special Links Encyclopedia Mazalais Blog E-mail Services |
நீல பகவன் துணைஅன்பு நண்பர்களே,ஒரு பறவை தன் குஞ்சுக்குப் பறக்கக் கற்றுக் கொடுத்துக் கூட்டை விட்டு வெளியே விரட்டுவது போல எனக்கு நல்ல கல்வியறிவைக் கொடுத்த என் பெற்றோர் எனக்குத் திருமனம் செய்துவைத்து மனவியுடன் வாழ்க்கைப் போராட்டத்தை சந்திக்க வைத்தனர். என் பெற்றோர் எனக்களித்த கல்வியின் துணைகொண்டு உலகினில் போராடி வென்றேன். இன்று யாரிடமும் கைகட்டி நின்று சேவகம் புரியும் நிலையின்றி, சுயமாக எனக்குத் தேவையான பொருளினை ஈட்டுமளவுக்கு வாழ்வில் நிலைபெற்றுவிட்டேன். என் பெற்றோரின் சஷ்டியப்த பூர்த்தி விழவில் என் மனைவி, மற்றும் குழந்தைகளுடன் சென்று பங்குகொண்டு மகிழ்ந்திருந்து, அதன் பின்னர் தந்தை நோய்வாய்ப்பட்ட தருணத்தில் தக்க பொருளுடன் என் மனைவியை அனுப்பி, அவரது உயிர் காக்கத் தேவையான சேவையைத் தக்க தருணத்தில் செய்து, தனயன் என்ற நிலையில் என் கடமையைத் தவறாது நிறைவேற்றினேன். என் தந்தை நீண்ட நாள் உயிரோடு இருப்பார் என்று எண்ணியிருந்த எனக்கு அவரது திடீர் மரணம் வாழ்வில் பேரதிர்ச்சியாக ஏற்பட்டது. அவரது மறைவிற்குப் பின்னர் என் மனதில் ஒரு ஏக்கம், தந்தை தாய் இருவருடனும் அவர்களது அந்திமக் காலத்திலாவது சேர்ந்து வாழ வேண்டுமென விரும்பியதுதான் நிறைவேறவில்லை, குறைந்தபட்சம் வயது முதிர்ந்த என் தாயுடனாவது அவர் இருக்கும் வரை வாழ வேண்டும் என்று. அந்த ஏக்கம் சந்தர்ப்பவசத்தால் நிறைவேற முடியாத சூழ்நிலை உருவானதால் தனியாக என் மனைவி மக்களுடன் காஞ்சியில் வாழ்கிறேன்.
ஆதி பகவனை அறிந்திலனாயினும் அன்பு கொண்டே என்தன் வாழ்வில் - அந்த
பெற்ற தாயுமே கைவிட்ட போதிலும் பேதை எனைக் காக்க வந்தே - ஒரு
கற்றவனாயினும் இந்த உலகினில் சுற்றும் வழியறியாமல் - என்தன்
நண்பர் பலரிந்த நானிலத்தில் எனக்குண்டு எனக்கொண்ட போதும் - ஒரு
இந்த நிலையறிந் தென்னைத் தனதிரு கண்ணின் மணி எனக் கொண்டே - அருள்
என்தன் துயரிங்கு தீரவழியொன்றைச் செய்யத் தவறிய தேவன் அந்தப்
உன்னைப் போல ஒரு உற்ற நண்பன் இனி உலகினிலே கிடைப்பானோ? - என்னைத் கண்ணீருடன் ஆகிரா |
YOUR FEEDBACK FOR THIS ARTICLE
|
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |