மழலைகள்.காம்
|
Children of today are the future LeadersEnable unicode to view all Tamil contents of this site CLICK HERE Tamil Fonts Converter CLICK HERE |
ஆகிரா
|
|
தந்தை மகற்காற்றும் உதவி அவையத்துமுந்தி யிருப்பச் செயல் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் அக்குழந்தை தனது வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று, உலகிலுள்ள மற்ற அனைவருடனும் அன்புடனும் நட்புடனும் நல்வாழ்வு வாழ ஆவன செய்ய வேண்டும். அது அவர்களது இன்றியமையாத கடமை. இந்தப்பணி அன்னையின் கருத்தரிப்புக் காலத்திலிருந்தே துவங்குகிறது முதலில் குழந்தை ஆரோக்கியமாகப் பிறப்பதற்கு அன்னை எவ்வாறு வாழ வேண்டும், எந்த வகையான உணவு உண்ண வேண்டும், எப்படிப்பட்ட உடற் பயிற்சிகளையும் பிற மருத்துவ உதவிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்வது அவசியம். குழந்தை பிறந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், குழந்தையின் ஆரோக்கியத்தை அறிதல், அதற்கேற்றபடிக் குழந்தையைப் பராமரித்தல் ஆகியவற்றைப் பெற்றோர் அறிந்து பின்பற்ற வேண்டும்.
ஒரு பெண் வாழ்நாளில் தன் பெண்மையின் பெருமையை முழுமையாக உணர்ந்து அகம் மகிழும் தருணம் தான் பெற்ற பிள்ளையை மார்போடு அணைத்து மகிழும் நேரமாகும். அத்தாய் தன் குழந்தையை நன்கு வளர்க்க அவள் முதலில் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு ஆவன செய்ய வேண்டிய கடமை தந்தையுடையதாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டியது மிகவும் அவசியம், அதிலும் குறிப்பாக, குழந்தை தாய்ப்பால் உண்டு வளரும் காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தாய்க்கும் குழந்தைக்கும் உள்ள பந்தத்தைப் போல் உலகில் பேரின்பம் தரும் பொருள் வேறெதுவும் கிடையாது.
உலகத்தோடொட்ட ஒழுகல் பல கற்றும்
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு எழுதப்படிக்கத் தெரிந்திருப்பது மிகவும் அவசியம். இது தெரியாதவன் மரத்துக்குச் சமம்.
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் பள்ளி செல்லும் வயதை அடையுமுன்பிருந்தே குழந்தைக்குக் கல்வி புகட்டுதல் நலம். தான் பெற்ற மகன் நன்கு கல்வி பயின்று உலகம் போற்றும் ஒரு சிறந்த அறிவாளியாக விளங்குவதைக் கண்டால் மகிழ்ச்சிக்கடலில் மூழ்குவாள் தாய்.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் அத்தகைய மகிழ்ச்சியைத் தாய்க்குக் கொடுப்பது தந்தையின் கடமை.
|
YOUR FEEDBACK FOR THIS STORY ![]() |
| Submit your articles | One Free Software Every Day | Submit Artwork | Happy Birthday |