-
பகுத்துண்டு மகிழ்வோம்
- வினைதீர்த்தான்
நாங்கள் எதனையும் பகிர்ந்து கொள்வோம்.
வயதான கணவன் மனைவி உணவு விருந்துக்குச் சென்றனர். ஒரு தோசை, ஒரு தட்டு சுண்டல், ஒரு பால் கொண்டு வரும்படி பணியாளரைக் கேட்டுக் கொண்டனர். முதியவர் பண்டங்கள் வந்ததும் ஆளுக்கொரு தட்டில் தோசையைச் சரிபாதியாகப் பிட்டுக் கொடுத்தார். சுண்டலில் பாதியையும் மனைவி முன் வைத்துச் சாப்பிடத் தொடங்கினார்.
மனைவி பால் மட்டும் சிறிதளவு அருந்தினார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் முதியவரின் துனைவியாடம், "ஏன் நீங்கள் உணவு அருந்தவில்லை?" என்று கேட்டார்.
துனைவியார் நாங்கள் எதையும் பகிர்ந்து கொள்வோம் என்றார்.
சிறிது நேரம் சென்றது. உணவு வாங்கப் பொருள் இல்லையோ என்று நினைத்த இளைஞர் முதியவரின் துனைவியாரிடம், " நான் உணவு வாங்கி தரட்டுமா?" என்று வினாவினார்.
துனைவியார் மீண்டும், "நாங்கள் எதையும் பகிர்ந்து கொள்வோம்" என்றார்.
கணவர் தம் தட்டில் இருந்ததை முடித்தக் கொண்டு பாலில் பாதியை அருந்தி முடித்து வாயைத் துடைத்துக் கொண்டார்.
இளைஞர் முதியவர்களை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
துனைவியார் சொன்னார், "நாங்கள் எதையும் பகிர்ந்து கொள்வோம், பற்கள் உட்பட" என்று முறுவலித்த படி கணவரிடமிருந்து 'பல் செட்' வாங்கி அணிந்துகொண்டு தன் பங்கை சாப்பிடத் தொடங்கினார்.
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














