அமெரிக்கா
கீதா சாம்பசிவம்
அத்தியாயம் 9
13 காலனிகள் இங்கிலாந்து அரசால் ஆளப் பட்டன. அவை எவையென்றால், நியூ இங்கிலாந்து என்று அழைக்கப்பட்ட பகுதியில்,
1. ப்ராவின்ஸ் ஆஃப் நியூ ஹாம்ப்ஷைர், பின்னால் நியூ ஹாம்ப்ஷைர் என அழைக்கப் பட்டது.
2. ப்ராவின்ஸ் ஆஃப் மாசசூசெட்ஸ் அண்ட் பே, பின்னர் மாசசூசெட்ஸ் எனவும், மெய்ன் எனவும் அழைக்கப் பட்டது.
3. காலனி ஆஃப் ரோடே ஐலாந்து, ப்ராவிடென்ஸ் ப்ளாண்டேஷன், பின்னர் ரோடே ஐலாந்து என அழைக்கப் பட்டது.
4. கனெக்டிகட் காலனி, பின்னர் கனெக்டிகட் என அழைக்கப் பட்டது.
அடுத்து மத்திய காலனிகள்:
1. ப்ராவின்ஸ் ஆஃப் நியூயார்க், பின்னர் நியூயார்க் எனவும் வெர்மாண்ட் எனவும் அழைக்கப் பட்டது.
2. ப்ராவின்ஸ் ஆஃப் நியூஜெர்சி, பின்னர் நியூஜெர்சி என அழைக்கப் பட்டது.
3. ப்ராவின்ஸ் ஆஃப் பென்சில்வேனியா பின்னர் பென்சில்வேனியா என அழைக்கப் பட்டது.
4. டெலேவேர் காலனி, (1776-க்கு முன்னர் Lower counties on Delaware என்று அழைக்கப் பட்டது) பின்னர் டெலேவேர் என்று அழைக்கப் பட்டது.
அடுத்து தெற்குக் காலனிகள்: இவைதான் அமெரிக்காவில் சுதந்திரத்துக்கும், அடிமை ஒழிப்புக்கும் காரணமாய் அமைந்தவை. அவை பற்றிப் பின்னர் வரும். 1. ப்ராவின்ஸ் ஆஃப் மேரிலாண்ட் பின்னர் மேரிலாண்ட் என அழைக்கப் பட்டது. 2. காலனி அண்ட் டொமினியன் ஆஃப் வர்ஜினியா, பின்னர் வர்ஜினியா, கெண்டுக்கி, மேற்கு வர்ஜினியா என அழைக்கப் பட்டது. 3. ப்ராவின்ஸ் ஆஃப் வடக்கு கரோலினா, பின்னர் வடக்கு கரோலினா, டென்னிசி என அழைக்கப் பட்டது. 4. ப்ராவின்ஸ் ஆஃப் தெற்கு கரோலினா, தெற்கு கரோலினா என்றே அழைக்கப் பட்டது. 5. ப்ராவின்ஸ் ஆஃப் ஜார்ஜியா, பின்னர் ஜார்ஜியா என்றே அழைக்கப் பட்டது.
இந்தப் பதின்மூன்று காலனிகளும் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்து வந்தன. ஆப்பிரிக்காவில் இருந்து கறுப்பின மக்கள் பெருமளவில் கொண்டு வரப்பட்டு அடிமை ஆதிக்கம் மிகுந்து இருந்தது. தென் பகுதியான மிஸ்ஸிஸிபி நதி ஓடும் பகுதியின் வளம் மிகுந்து இருந்ததால் பெருமளவில் பண்ணைகள் தோன்றின. அவற்றில் பெருமளவு ஆங்கிலேயரே குடியேறினர். சில கலப்பினங்கள் இருந்தாலும், பெருமளவு மக்கள் ஆங்கிலேயராகவும், ஆங்கில ஆட்சியை ஆதரிப்பவர்களாகவுமே இருந்து வந்தனர். என்றாலும் ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் புரட்சி செய்தவர்களில் பலரும் வம்சாவளி ஆங்கிலேயராகவே இருந்து வந்தனர். அதையும் பின்னர் பார்ப்போம்.
பெரும்பாலான உலக மக்கள் "அமெரிக்கா" என்ற பெயர், அதை முதன் முதல் (கொலம்பசுக்கும் முன்னர்) கண்டறிந்த "Amerigo Vespucci" என்பவரின் பெயரில் இருந்து வந்திருக்கலாம் என்று சொன்னாலும், பெரும்பான்மையான ஆங்கிலேயர்கள் சொல்வதும், ஆங்கிலேய வரலாற்றில் சொல்லுவதும் என்னவெனில், கொலம்பசுக்கும், வெஸ்புசிக்கும், பல நூற்றாண்டுகள் முன்பே, புதிய கண்டத்தைக் காணச் சென்ற ஆங்கிலேய வெல்ஷ் குடியைச் சேர்ந்த பிரபுவான, "Richard Amerique" என்பவர் பெயரில் இருந்து, பின்னால் உள்ள அவர் குடிப் பெயர் ஆன "அமெரிகெ" என்பதே கண்டத்தின் பெயராக மாறியது என்பதே. இப்படிப் பல விதங்களிலும் தங்கள் நாட்டையும், ஆங்கில மொழியையும் பரப்பி வந்த ஆங்கிலேய அமெரிக்கர்கள் வெகு சீக்கிரமாகவே அமெரிக்க அரசியலிலும் முன்னேற ஆரம்பித்தனர். பெரும்பாலான ஆங்கிலம் பேசும் அமெரிக்கர்கள், இங்கிலாந்து அரசால் மிகவும் மதிக்கப் பட்டதாலும், அவர்களுக்கு இங்கிலாந்து அரசு மிக மிக மதிப்புக் கொடுத்து வந்ததாலும், அரசாங்கத்திலும், சட்டங்கள் போடுவதிலும், நிர்வாகத்திலும் பெரும்பான்மையாக ஆங்கிலேய வம்சாவளியினரே இடம் பெற்றார்கள், முக்கியத்துவமும் அடைந்து வந்தார்கள்.
தொடரும்...
Your Feedback
| |||||||
| Mail To Editor: editor@mazhalaigal.com Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Submit your articles | Free Software Every Day | Submit Artwork | Happy Birthday | ||||















