தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- அன்பே கடவுள்!
N V Subbaraman
அன்பின் வழியே அறவழிதம்பி
என்பதை மனதி¢ல் என்றும்வைத்திடு!
என்பதை மனதி¢ல் என்றும்வைத்திடு!
அன்பே கடவுள் என்றார் அண்ணல்
அன்பால் உலகை வென்றிடு என்றார்!
அன்பின் வழியது உயிர்நிலை என்றார்
அருளோன் வள்ளுவன் குறளைத்தந்தார்!
அன்பை உயிரென முழுதாய் ஏற்றோர்
என்பையும் பிறர்க்கு உறுதியாய்த் தருவார்!
அன்பே அறனென உளத்தில் கொண்டவர்
நட்பிற்கென்றும் ஏங்காதிருப்பவர்!
அன்பைப் பிறர்க்கு அள்ளித்தருபவர்
இன்பம் தன்னை எளிதாய்ப் பெறுபவர்!
அன்பிற்கு என்றும் எல்லை இல்லை
அன்பும் தெய்வமும் ஒன்றே ஆகும்!
அன்பின் வழியே அறவழிதம்பி
என்பதை மனதில் என்றும் வைத்திடு!
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














