தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- சுவர்க்கம் எங்கே?
Natarajan Kalpattu
தாமரை இலைத் தண்ணீ ரெனெத்
தான் இருந்திடல் வேண்டும் நீர்
தான் இருந்திடல் வேண்டும் நீர்
பாரினில் உள்ளோர்க் கெல்லாம்
சாமரம் வீசிடும் தென்றலென
பாமரர்க்கும் பரிவு
காட்டிடல் வேண்டும்
சுத்தம் வேண்டும்
உடலிலும் மனத்திலும்
சத்தமும் சண்டையு மென்றுமே
தவிர்த்திடல் வேண்டும்
கற்றவை மற்றவர்க்கே
கற்பித்தல் வேண்டும்
எல்லாம் தந்த ஈசனுக்கே நன்றி
சொல்லாமல் சொல்லிடல் வேண்டும்
இவை எல்லாம் செய்திட்டால்
பாரினில் வாழ்ந்தே
பார்த்திடலாம் சுவர்க்கமதை
நடராஜன் கல்பட்டு
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













